Wednesday, February 21, 2018

இன்றைய இறை சிந்தனைகள்

இன்றைய இறை சிந்தனை.

ஓம் கணேசாய நமஹ
அல்லாவே நமஹ.
இறைதூதர் ஏசுவே நமஹ/
அஹிம்சை வழி குரு மகாவீர் போற்றி .
அன்பு வழி புத்தரே போற்றி
வீரமும் பக்தியும் குரு கிரந்த மே போற்றி .
இன்னும் உலகில் நல்வழி காட்டும்
அறிந்தும் அறியாமல் வையகம் காக்கும்
தெய்வங்களே போற்றி.
இன்றைய இறை சிந்தனையில்
ஞானமும் அறிவும் உள்ளவர்களாகிய
மனிதர்களிடம் ஒரு கேள்வி.
மிகப் பழமையான ஹிந்து என்று வெளிநாட்டினர் அளித்த பெயரை சனாதன தர்மம் ஏற்றுள்ளது.
கி.பி.,கிமு என்பதுபோல்
சனாதன
ஹிந்து மதம் தோன்றுவதற்கு முன் / தோன்றிய பின்
என்ற வரலாறு கிடையாது.
அறிவைக்கொடுத்த இறைவன்
சுயநலத்தையும்
கொடுத்துவிட்டான்.
சுயநலம் என்பது சனாதன
தர்மப்படி மாயை.
இஸ்லாமிய /கிறிஸ்தவ மதப்படி
சாத்தான் /சைத்தான்.
சனாதன மதப்படி லௌகீகம் ./அலௌகீகம்.
இவ்வுலக ஆசாபாசங்கள் என்பது
உடனடி இன்பம் என்பதே லௌகீகம் .
ஒரு குளம் .ஏரி, இவைகளை
மூடி நகரமாக்கி
பொருளீட்டுவது ,
இதற்குத்துணை போகும்
அரசியல் வாதிகள்,அதிகாரிகள் ,
வீட்டுமனை ,வீடு விற்பனையாளர்கள் ,தொழிற்சாலைகள் நிறுவும்
தொழில் அதிபர்கள்
லௌகீக ஆசைகள் கொண்டு
வேலைவாய்ப்பு ,நகர்ப்புற அபிவிருத்தி என்று
பணம் ,நகை ,வாகனம் ,ஐந்து நக்ஷத்திர ஹோட்டல்கள், விளைவு அறிவியல் சாதனங்கள் என்ற சைத்தான் கள். ஆண்டுக்கு ஒரு மாற்றம் .
அடுத்த சைத்தான் கடன் ,கடன் அட்டை.

விவசாய நிலங்கள் ,ஏரிகள் அழிப்பு
மாயை செய்யும் வேலை.
அரசர்கள் அரண்மனை ஆலயங்கள் .
கல்வி அறிவும் ஆற்றலும் உள்ளவர்களுக்கே.
சராசரி மதிப்பெண்,
இட ஒதுக்கீடு இதுவும் மாயை.
அனைவருக்கும் கல்வி அவசியம்.
ஆனால்
பணம் படைத்தவர்கள் தான்
படிக்கவேண்டும் என்ற அரசர்கால நிலைக்கே இன்று மக்களாட்சிகளும்.
விளைவு ஏகலவியன் ,விதுரன் ,ரைதாஸ் ,கபீர் கர்ணன் ,போன்ற ஆற்றல் மிக்கவர்கள் வளரத்தடை.
இதுவும் அறிவும் ஞானமும் பெற்ற
மனிதர்களின் மாயை/ சைத்தான்கள்.
இப்படியான சிந்தனைகளில்
பாருங்கள் ஒரு விசித்திரம்
அடிமைவம்சம் ஆட்சி .
கல்கத்தகாளி ஆலயம்.
ராமகிருஷ்ண பரமஹம்சர்
அவர் சீடர் விவேகானந்தர் .
ஆலயம் கட்டி அர்ச்சகர்
கிடைக்காத ஆலயம்.
அப்பொழுது அங்கே பூஜாரி பதவி ஏற்ற அந்தணர் .
அவர் சீடரால் வையகம்
போற்றும் பாரதம்.
பாரதத்தை அவமரியாதையுடன் பார்த்த ,
மேலைநாடுகள் ,
பாரதத்தின் மதிப்பறிந்து
உயர்ந்த நோக்கோடு
பார்த்த நிலை.
விவேகானந்தரின் வையகம் வாழ ,
வையகம் ஒரு குடும்பமாக வாழ
அவர் ஆரம்பித்த சொற்பொழிவின்
முதல் வார்த்தை சகோதர சகோதரர்களே!
இப்படி உலகில் இன்சானியத் /மனுஷ்யதா/ மனிதநேயம் வளர்க்கும்
சனாதன தர்ம சிந்தனைகள்.
தர்மம் என்றால் அறம்.
சனாதன அறங்கள்.
அறம் வேறு. மதம் வேறு.
வெளிநாட்டினர் ,மற்ற இந்திய மதங்கள்.
ஆனால் அறவழி/தர்ம சிந்தனை
அருவமும் உருவமும் ஆகிய இறைவன்.
ராமன் குஹன் சபரி நட்பு ,
விதுரன் பிறப்பு என்று ஜாதி
சம்ப்ரதாயம் அற்ற
சனாதன தர்மம்.
குந்தி பாண்டவர்கள் பிறப்பு ,
இவை எல்லாமே ஜாதிய
ஒழிப்புக்கு சான்றுகள்.
இவை எல்லாம் மீறி ஆணவம் ,
சுயநலம் ,
மனித இன சம்பிரதாய
ஏற்றத்தாழ்வுகள்
நாம் பெற்ற ஞானத்தை
சரியாக பயன்பெறவில்லை என்ற
நிலைக்கு சான்றுகள்.
சனாதன தர்மம் அன்பு ,அஹிம்சை ,
பரோபகாரம் ,தானம் தியாகம் ,
முற்றுலும் துறந்த நிலை.
ஆனால் சில மதங்கள் அழகாக
மிகவும் கலை நயத்துடன்
படைத்த சிற்பங்களை அழிக்கின்றன.
பச்சிளம் குழந்தைகளை இரக்கமின்றி கொல்கின்றன.
வன்முறை வளர்க்கின்றன.
ஆனால் இக்பால் கூறிய படி மதங்கள் மனிதர்களை விரோதியாக கருத கற்பிக்கவில்லை.
मजहब नहीं सिखाता ,आपस में वैर रखना.
சைத்தான் /சாத்தான் /மாயைகளிடம் இருந்து
தப்பித்து இன்சானியத் /மனுஷ்யதா/ மனிதநேயத்துடன் வாழவே கற்பிக்கின்றன.
இதை அறிவுபெற்ற / ஞானம் பெற்ற சித்தர்கள் கூறுகிறார்கள்.
மதப்பற்று சுயநலம் உள்ளவர்கள் இன்னும் மாயை /சைத்தானின் .சாத்தானின் பிடியில் இருந்து விடுபடவில்லை என்பதே
இன்றைய இறைவன் எனக்களித்த சிந்தனைகள்.
உலகம் அமைதியாக/ சாந்தியாக/peacefull ஆக
இருக்க அன்பு ,அஹிம்சை .ரஹம் ,இரக்கமாக/
வாழ்ந்து வன்முறையில் இருந்து தப்ப வேண்டும்.
இன்று எனக்கு இறைவன் அளித்த சிந்தனைகள்.
------------------------------------------------------------------------------
ஓம் கணேசாய நமஹ !
ஓம் கார்த்திகேயாய நமஹ .
ஓம் நமஹ சிவாய.
ஓம் துர்காய நமஹ.
அருவமும் உருவமும் உள்ள
பகவானே போற்றி.

No comments: