Monday, December 11, 2017

ஞான கர்ம சந்நியாச யோகம் --௨. கீதை

ஞான கர்ம சந்நியாச யோகம் --௨. கீதை 

  வழிபடுவது என்பது  எளிதல்ல.
ஒவ்வொருவரும்  ஆண்டவனிடம்
ஒவ்வொருவித  வேண்டுகோள்கள் வைப்பார்.
பிரசாதமும் வகை வகையாக.
சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் ,
கல்கண்டு  பொங்கல்,.
அவ்வாறே வழிபடும் முறை ,
அணுகுமுறை ,கோரிக்கை  அவரவர்களுக்கு
ஏற்ற அனுக்ரஹம். கடவுளின்  கருணை    என்கிறார்
பகவான் கிருஷ்ணர்.
நாடு வாழவேண்டும் , வையகம் வாழவேண்டும்,
நான் மட்டும் வாழவேண்டும்.
என் மக்கள் வாழவேண்டும்.
இப்படியே தான்  அதிகமானவர்கள் கோரிக்கை இருக்கும்.
இறைவனிடம் நீயே கதி ,எனக்கு முக்தி என்பது
எத்தனை பேரின்  கோரிக்கையாக இருக்கும்.
இறைவனே உன்னடி  சரணம் . நானே உன்    குழந்தை .
எனக்கு  நீதான் வேண்டும் . உன் அருள்மட்டும் போதும்.
உயர்வு,செல்வம் ,மரியாதை எல்லாமே   மாயை.
கர்மவினைப்படி  இறைவா!
என்னைப்படைத்த  நோக்கம் அறிந்தவன்  நீ.
உன் விருப்பப்படி   என்னை    வழி நடத்திச்  செல்.
 என்று முற்றிலும் அவனை நம்பி 
   எவ்வித  ஆசையும் இன்றி  ஆத்மஞான  பிரார்த்தனை. முடியுமா ?
இதையெல்லாம் கண்காணித்தே 
ஆண்டவன் அருள் பொழிவார்.என்று
 கிருஷ்ண பகவான் தன்னைப்பற்றிய
விளக்கத்தை  அளிக்கிறார்.

   தங்கள் கர்ம   பலனை  உடனடியாக  பெற
இறைவனை வழிபடுகிறார்கள்.
 உலகில்  பணியாற்றியதும்  ஊதியம்
கிடைக்கிறது. 
  வழிபடாமல்  எதிர்ப்பவர்களும்
உயர் நிலையில்     இருக்கிறார்கள் .
 
 இது கர்ம வினை ,பூர்வ ஜன்ம
புண்ணியம்  .பலவிதத்தில் இறைவன்
 ஆராய்ந்து  உயர் ,  தாழ்     நிலைகளில் 
வைப்பதாக
 ஸ்ரீ கிருஷ்ண    பகவான்   தான் தான்
  அனைத்தும்   என்கிறார்.


  அறிவு ,செயல் ,ஞானம் ,குணம்,நடத்தை
 ஆகியவற்றின்  அடிப்படையில்     நான்கு 
வர்ணங்களைப்  படித்ததாகக்
கூறுகிறார்.  ஆனால் நிறம் கொண்டு  பிரிக்கவில்லை.
இயல்பைக்கொண்டே  பிரிக்கிறார்.

No comments: