Monday, December 11, 2017

ஞான கர்ம சந்நியாச யோகம் --கீதை-௩.

ஞான கர்ம சந்நியாச யோகம் --கீதை-௩.

  பகவானை  அறிய வழி என்பதை
 ஸ்ரீ கிருஷ்ணன்  கூறுவது;-

பக்தனுக்கு  வினை யாற்றுவதில் 
 வினைப்பலனில்  
கடுகளவிலும்  ஆசை
   இருக்கக் கூடாது.
  கர்மங்களில் ஈடுபடுவதால் 
கர்மபலனை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
கர்ம பலனானால்
 ஆசைகள் அதிகரிக்கின்றன.
 பகவான் கர்மங்களுக்கும் 
ஆசைகளுக்கும் அப்பாற்பட்டவர்.
அவ்வாறே  பகவானின் வடிவை
அருளைப் பெற விரும்புபவர்கள்
ஆணவமற்று,ஆசையற்று  இருக்கவேண்டும்.
எந்த கர்மங்களும் கட்டுப்படுத்தக்  கூடாது.

     முமுக்ஷு என்று முடிக்கிறவனுக்குக்
கொடுத்திருக்கும் லக்ஷணங்கள் ,
அவன் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு
ஸாதனையில் உச்சிக்குப் போனவன் என்று
 
   தன்  தெய்வத்தின்  குரலில்  மஹா பெரியவா கூறுகிறார்.
அந்த முன்னாளைய முமுக்ஷுக்கள்  இதை அறிந்தே
கர்மங்களைச் செய்தனர்.
இப்படி தொன்று தொட்டு வரும் முறையையே
ஸ்ரீகிருஷ்ணர்    அர்ஜுனனுக்கு சொல்கிறார்.
 மனம் என்ற ஒன்று இல்லை
என்ற   நிலைக்கு  வரவேண்டும்.
 கர்மங்களில்  ஆசைகள் இருக்கக் கூடாது.

  மனிதர்களுக்கு  கர்மம் எது
?அகர்மம் எது ? என்று தெரிவதில்லை.
 ஞானிகளே   இவ்விஷயத்தில்   தெளிவடைவதில்லை.
அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர்  கர்மங்களைப் பற்றியும் ,
கேடுகளில் இருந்து விடுபடுவது பற்றியும்   விளக்குகிறார்.

  நாம் செய்யும் கர்மத்தின் போக்கைத் 
தெரிந்து  கொண்டால் ,
விலக்கப்பட்ட கர்மம் எது என்று தெரிந்துவிடும்.
இதில்  கர்மம்  என்பது 
 உடலால் நடைபெறும் செயல்களாகும் .

அகர்மம் என்பது ஞானத்தால் செய்யபடுவது.
  சரீர கர்மங்கள் சில இயற்கையாக ஏற்படுவது,
அதில் சில காலைக்கடன் போன்றவை
  கட்டாயம் கழிக்கக் கூடியது.
இதைத் தடுக்க முடியாது.
ஆனால்  பாலின  கவர்ச்சி என்பதைக்
 கட்டுப்படுத்தலாம்.
வீணாக ஒழிந்து ஒட்டு கேட்கக் கூடாது.
தீயவைகளைப்பேசி  பரப்பக்கூடாது.
என்று புலன்களைக் கட்டுப்படுத்தும் போக்கில் 
நாம்  நம் கர்ம வினைகளின் நல்ல
தீய போக்கை அறிந்துகொள்ளலாம்.

 மாற்றான் மனைவியை நோக்குதல் சரீர பாவம்.
  அவதூறு பொய்யாக பரப்புதல் நாக்கின் தவறு .
 இதை எல்லாம்  நாம்  தவிர்த்து  ஆசையில்லாமல்
இருப்பதையே  முமுக்ஷுக்கள் செய்து முக்திபெற்றனர்.
 ஞானம் பெற்றனர்.

 கண்ககள் நல்லவைகளைப் பார்க்கும் போது
 நம்  செயல் போக்கு நமக்கு உணர்த்தும் .
 தவறான பார்வை  கெட்டபார்வை என்பது
 எதைப்    பார்க்கக் கூடாதோ அதைப்பார்ப்பது.
 ஞானத்தால் செய்யப்படும்    செயல்  அறிந்தே   செய்யப்படுவது.

அறிந்தே செய்யப்படும் காரியங்களின்
போக்கில்   நமது தீய வினை  புரிந்து விடும்.

ஊழல் புரிந்து பணம் சேர்ப்பது , அறிந்து பொய் பேசுவது ,

கையூட்டு பெறுவது, கடமையில்  கவன மின்மை,

 அலட்சியப்போக்கு , நேர்மையற்ற செயல் இவை
 தெரிந்தே   செய்வது. இதில்  வெற்றி  கிட்டினாலும் 
ஆண்டவனின்  தண்டனையில் இருந்து தப்ப    முடியாது.


ஆகையால் நமது வினைகள் உடலாக இருந்தாலும் சரி ,
அறிவால்  செய்யப்படும்  கர்மமானாலும் சரி 
அதன் தன்மையை ஸ்ரீ கிருஷ்ண பகவான்   அறிந்து
அதற்கேற்றபடி    அருள் புரிவார்  என்பதே
இந்த கர்ம   வினைப்  பயனாகும்.

கர்மத்தில் அகர்மத்தையும் , அகர்மத்தில்  கர்மத்தையும் காண்போன்  மக்களுள்  மேதாவி.
அவனே  யோகி.
அவனே   எல்லாம்  செய்து  முடித்தவன் .
என்று ஸ்ரீ பகவானே அர்ஜுனனுக்குத் 
 தெளிவு படுத்துகிறார்.

No comments: