Friday, November 24, 2017

ந்ருசிம்ம கடாக்ஷம்

ஸ்ரீ ந்ருசிம்ஹ க்ருபா 
கடாக்ஷம் 

ஞானம் கொடுத்தான் .
ஞாலத்தில் வாழ 
நரவடிவும் கொடுத்தான்.
ஆரோக்கியம் அளித்தான். 
ஆஸ்தி அளித்தான்.
ஆனந்தமான வாழ்வில் 
இளமையின் ஆட்டம் 
அவன் அளித்தன எல்லாமே 
நான் என்ற அகந்தையால் 
அவனை மறந்து அவனியில் 
நானே என்று துள்ளித்திரிந்த 
அஹம்பாவத்துடன் இருக்கும் 
நரனுக்கு எச்சரிக்கையாக 
கருப்பு முடியை வெள்ளை யாக்கி
எச்சரிக்கை ! எச்சரிக்கை ! எச்சரிக்கை !
என்றே காட்ட சரீரத்தில் தளர்ச்சி 
இருப்பினும் மனிதன் வெள்ளிப் பணத்தை 
கருப்பாக்கி ஊழல் பலபுரிந்து 
தலைகால் புரியாத நிலையில் 
கடுப்பான கடவுள் முதுமையை அளித்தான்.
கர்ம வினைகளின் சுவர்க்க நரகம் 
புவியினிலே மனிதனுக்கு 
முதுமையின் கொடுமை. 
நல்வினை செய்தோருக்கு 
நல்ல நிலை முதியோர் ஆஷ்ரமம் இல்லை.
தீய கர்மம் செய்தோர் குழந்தைகள் 
சுடும் வார்த்தைகள் ஒரு நரகம்.
ஆட்டங்கள் அடங்கியும் ஆண்டவன் 
நினைவின்றி உள்ளவர்கள் 
காலன் எளிதாக நெருங்காமல் 
பிணிகள் பல அளித்தான்,
முதியோர் ஆஷ்ரமத்தில் கண்ணீர் சிந்த 
நரக வேதனைகளே நரசிம்மன் அளித்தான்.
கள்ளப்பணம் ,ஊழல் , அழாகான மாளிகை வாசம் 
ஆனால் அந்த முதுமையில் சரீர துர்நாற்றம்.
ஆஹா! இந்தக் கிழம் போகவில்லையே 
சீ !என்று எமன் வருவானோ ! உறவுகள்.
நரக வேதனைப்பாட்டே முதுமை.
வயதாகிவிட்டதே! என்று தாங்கும் உறவுகள்,
அன்பாக அருகில் உறவினர் சேவை 
இது ஒரு சுவர்க்க முதுமை .
நரசிம்மன் இங்கே நரனை நாரவைத்து 
காலனை அனுப்புகிறான். 
இதில் எத்தனை வேதனை
சந்தான பாக்கியமின்மை 
சக்தியுள்ள உடல் இன்மை 
சாதனை செய்யும் அறிவின்மை ,
சந்தனாபாக்கியத்தால் ஆனந்தம் 
சந்தான பாக்கியத்தால் குபுத்திர வேதனை 
இப்படி வையாக வாழ்க் கை 
உணர்ந்து குழந்தையில் இருந்தே 
இறைநாமம் , இறைபயம் , இறை அபயம் 
சரணகத்திதுவம் அறம் போதிப்பதே 
ஸ்ரீ ந்ருஸிம்ஹ கடாக்ஷம் .
ஓம் நாராயணா. 
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !ஓம் சாந்தி !

No comments: