Thursday, November 23, 2017

இறைவன் அருள்

Anandakrishnan Sethuraman is thinking about all the good times.
வாழ்க்கையில்
வறுமையுடன்
மட்டுமா
எதிர் நீச்சல் .
பணம் உள்ளவர்களும்
படித்தவர்களும்
போட வேண்டும் எதிர்நீச்சல்.
முயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார்
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருந்தக் கூலி தரும்.
சோம்பேறிகளே வருமானம் இல்லை என்று
சாக்குப்போக்கு காட்டுவர்.
முப்போதுகோடி மக்கள் இன்று
நூறு கோடி மக்கள் ;
வேலை தேடி அலைவதும் வேலை
அலையாமல் வேலை பெறுவதும்
வேளை வரும் என்று
வேலனை வேண்டுவதும் வேலை.
இரண்டாவது உலகப்போர் டாடா வின்
முயற்சி இரும்பு வாணிகம்.
இறைவன் வேலைக்கு வேளை வர
பாரதியார் சொன்னது போல்
ஆண்டவன் ஒரு அக்னிக்குஞ்சு வழிதான்
காட்டுவார்.
அனைவருக்கும் அனைத்துத் திறனும் அளிப்பதில்லை.
எதோ ஒரு வாய்ப்பு திறமை
நாம் அனைத்துத் திறனும் பெற முயற்சிக்கவேண்டும்
அதில் ஏதாவது ஒன்று நம்மை வாழ்க்கைக்கு வழி
நடத்தும்.
ஹிந்தி போராட்டம். ஹிந்தி எதிர்ப்பு.
எனது தாயார் கோமதி அம்மாள் ஹிந்தி ஆசிரியை .
௧௯௬௬ நானும் ஹிந்தி எதிர்ப்பு.
௧௯௬௭ இல் எனக்கு ௧௭ வயது.
அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை.
வீட்டில் வறுமை .நான் வெறுத்த ஹிந்தி
எனக்கு வாழ வழி வகுத்தது.
அம்மாவின் விடுப்பில் சென்ற வேலை
எனக்கு கிடைத்தது.
அரசின் இருமொழிக் கொள்கையால்
வேலை இல்லை. ஆனால் ஹிந்தி ஆசிரியராக
இருந்ததால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை .
வெறுப்பு என்பது வேறு . அந்த மொழியில்
புலமை பெறுவது வேறு.
நாம் ஆங்கிலேயரை எதிர்த்தோம்.
எதிர்த்த தலைவர்கள் அனைவருமே
ஆங்கிலத்தில் வல்லமை பெற்றவர்கள்.
வழக்கறிஞர்கள்.
அன்றும் சரி இன்றும் சரி
ஆங்கில அறிவு இருந்தால் தான்
மரியாதை . கௌரவம்.
வேலை வாய்ப்பு.
இந்நிலையில் நானும் பல வகையில் எதிர்நீச்சல் போட்டு ஹிந்தியில் முதுகலை பட்டம்.
இந்த முயற்ச்சிக்குப்பின்
ஆண்டவனின் பேரருள் துணை நின்றது.
அரசு உதவி பெரும் பள்ளியில் ஹிந்தி ஆசிரியர் வேலை.
ஒன்று என் முயற்சி. மற்றொன்று வேலைவாய்ப்பில்லாத ஹிந்தி மொழி ஆசிரியர்.
இந்த எதிர்நீச்சலில் முயற்சியும் ஆண்டவன் அருளும் இணைந்த வெற்றி.
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கார்த்திகேயாய நமஹ
ஓம் நமஹ சிவாய.
ஓம் துர்காயை நமஹ.
முயற்சி தெய்வீக அனுக்கிரஹம்
இரண்டுமே தேவை . அப்பொழுதே எதிர்நீச்சலில்
வெற்றி பெற முடியும்.
சத்தியம் , நேர்மை ,கடமையை சரியாக செய்தல்.
நமக்கிருக்கும் உண்மைத் திறனறிதல்
முன்னோர்களின் புண்ணிய பாபங்கள்
. மேலைநாடுகளில் இவை அதிகம்.
பாரதத்தில் இறை பயம் இருந்தாலும்
ஊழல்கள் அதிகம் . ஆனால் நல்லவர்களின்
முயற்சி இறை அருள் நம்மை
வையகத்தில் மேன்மை அடையச் செய்கிறது.
பாரதநாடு பழம்பெரும் நாடு.
இந்நினைவினை அகற்றாதீர் .
நீர் அதன் புதல்வர்.
பத்து ரூபாய் கீரை விதை ஆறு சதுரடி உழைத்தால்
வருமானம். சிந்திப்பீர்!

No comments: