Sunday, November 26, 2017

கர்மயோகம் --பகவத் கீதை --௪


  படைப்புக்    கடவுள்   பிரம்ம தேவன் .
   வேள்வியுடன்    மக்களைப் படைத்தான்.
அது மனிதனின்   விருத்திக்காக.
 வளர்ச்சிக்காக .

 விருப்பங்கள்  நிறைவேறும்
  கேட்பதெல்லாம் கொடுக்கும்
காமதேனுவாகட்டும்   
என்றும் பிரம்மா கூறினார்.
   இதுவே  படைப்பின்  ஆரம்பம்.

காமதேனு  ஒரு பசு .
 விரும்புவைகளைக் கொடுக்கும்.
அதை வளர்த்தால்  சிறப்பு.
இங்கு அது நற்செயல் புரியும்
வேள்விகள் செய்வதாகும்.

  இறைவனால்   படைக்கப்பட்ட
மனிதர்களுக்கு இன்னல்கள் இல்லை.
இன்னல்களுக்குக்     காரணம் அவன் கர்மங்களே .

நாம் விதைக்கும் விதைக்குத் தகுந்த
 பலன் கிடைக்க வேண்டும்.
அதற்கு  விதை எப்படிபட்டது,
எவ்வித மண்ணில்    வளரும் .
அதற்கேற்ற  பருவ நிலை ,
தட்ப வெட்ப நிலை
எல்லாம் அறிந்து பயிரிட வேண்டும்.

              மனிதனுக்கு மட்டும் 
  இறைவன்  ஞானத்தைக்கொடுத்தான் .

ஆனால் அவன் நன்மை தீமைகள் அறிந்தும்

 உடனடி பலன் பெற
தீய வழிகளைப்
பின்பற்றுகிறான்.
அவன் தன்  வலிமை,
பதவி, அதிகாரம்
செல்வம் ஆகியவற்றால்
அனைத்தும்
சாதிக்க முடியும்
என்று     நினைக்கிறான்.


அவன் செயல்களுக்கேற்ற
 பரிசும்  தண்டனையும்   கொடுக்க
 ஒருவன் மேலிருந்து கவனிக்கிறான்
 என்பதை முற்றிலும்  மறந்து விடுகிறான்.
அந்த  சர்வ   சக்தியை அறிந்த
 ஞானியின் செயல்  வேறு.
 உலகியல்     கர்மங்கள்  வேறு.
ஆனால் ஒன்றுக்கொன்று
தொடர்பு கொண்டவை.
ஞானி  அந்த   அந்த சர்வ சக்தியின்
 மேன்மையை  நிகரற்ற தன்மையை
 கர்யோகிகளுக்கு   நினைவு
 படுத்திக்கொண்டே இருக்கிறான் .

No comments: