Wednesday, November 1, 2017

ஞானம்

ஆன்மிகம் என்பது 
கடும் மந்தணம் .
ஆண்டவணைக் காண 
ஆழ்ந்த தியானம் ,
பரிகாரம் ,பாலாபிஷேகம் 
படோடபம் ஆடம்பரம்
லௌகீக வேள்விகள் ,
தேவை இல்லை .
நமக்கு ஆண்டவன் அளித்த கடமையை
அன்புடன் சத்திய தர்மத்துடன்
ஆர்வமாக ஆழ்ந்த ஈடுபாடுடன்
உள்ளத்தில் மகிழ்வுடன்
நடுநிலையுடன் செய்தாலே
அவன் அருளால் அறிவு ஞானம் பெருகும்.
மன சஞ்சலம் அகலும் ,
ஞானம் வந்தால் அழியும் உலகில்
வாழும் நிலையற்ற தன்மை உணரும்.
இலவசமாக மருத்துவம்
தான தர்மம் செய்வோரும்
மூப்படைந்து மரணம் தான்.
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து
உயர் பதவி வகித்தாலும்
மர்ம மரணம் நீதி தேவன் மர்மம்
குடிசையில் வாழ்ந்தாலும்
மரணம் . மரணம். பிணம் .
இதுதான் சித்தர்கள் ஞானம்.
அறிந்து சித்தத்தில் சிவனை வைத்தால்
வாழ்க்கையில் அமைதி உளநிறைவு உவகை .
இதே தான் ஞான நிலை.

No comments: