Monday, November 27, 2017

கர்மயோகம் --பகவத்கீதா -5



        வேள்விகள் செய்து
 தேவர்களைப்  போற்றுங்கள்.

அந்த தேவர்களை
   நீங்கள்  வளர்ப்பதால் 
  அவர்கள் உங்களை
வளர்க்கட்டும்.   
ஒருவொருக்கொருவர் 
 நன்மை செய்து
  வளர்வீர்களாக. 
இப்படி தேவர்களும்
அவர்களின் ஆசியால்
 நீங்களும் வளர்வீர்களாக. 

      வேள்வியால்  போற்றப்பட்ட  தேவர்கள்  , 
 நல்ல  ஆசாரமுடையவர்களின்  அனைத்து   
  மன விருப்பங்களையும்
  நிறைவேற்றுவார்கள். 
தேவர்கள்  நல்லது செய்யும்போது    
 அவர்களுக்கு  நன்மை 
செய்யாதவர்கள் ,
துதி செய்யாதவர்கள்   திருடர்களே.
அவர்கள்  இழி  நிலை  அடைவார்கள்.

  தேவர்களைப் போற்றி
   நல்ல  நிலையில்
அறநெறியில் வளரவேண்டும்.
பாவங்களில் இருந்து 
விடுபட  வேள்விகள் செய்து
மீதமுள்ளதை சாப்பிட வேண்டும்.

வேள்விகளின்  வகைகள் :--
௧,தேவர்களுக்கான     வேள்வி
௨.  ரிஷியக்கியம் --
உலக சுபிக்ஷத்திற்காக ,
  நல்ல நூல்களை
எழுதியுள்ள  நல்ல 
அறிவியல்  நூல்கள்
மெய்ஞான நூல்கள்   எழுதிய
மகான்களுக்கான  வேள்வி .
௩.பித்ருயக்ஞ்யம் :-
தங்கள் முன்னோர்கள் ,
பெற்றோர்கள் 
நம்மைப் பெற்று வளர்த்து 
ஆளாக்கியவர்களுக்கு  சேவைகள்
நாள் தோறும்   பணிவிடை செய்தல்.
௪. நரயக்ஞம் :--
மனித   இனத்திற்கு  சேவை செய்தல்,
நோய்களைப் போக்குதல் ,
கல்வி   கற்பித்தல் ,
வாழ்க்கைக்கு  நல் ஒழுக்கங்கள்
நாகரிக அறிவியல் வளர்ச்சி 
மாற்றங்கள்  ஆகிவற்றுக்கேற்ற
பண்பினை வளர்த்தல்
மனிதவேள்வியாகும்.

௫.  பூத யக்ஞம் :--
மக்களின்   அன்றாட வாழ்க்கைக்கு
பயன்பட்டுவரும்   
 ஆடு ,மாடு ,செடிகள்,மரங்கள்
ஆகியவற்றைப்  பேணுதல்
 இயற்பியல்   வேள்வியாகும்.

No comments: