Sunday, November 26, 2017

கர்மயோகம் -பகவத் கீதை --3


  வேள்விகள்  செய்யப்பட வேண்டும். 
ஆனால் இவ்வுலகம் மற்ற
கர்மங்களில் ஈடுபட்டுள்ளது.
வேள்விக்கான செயல்களை
 எவ்வித  பற்று ஆசாபாசங்கள்
 இன்றி செய்யவேண்டும்.
இவ்வுலகத்  துன்பங்களுக்குக் காரணம்
பறித்துப் புசித்தல்.
 இந்நிலையில் போராட்டம்.

இதைக்   கீழ்  நிலையில் உள்ளவர்களை விட
ஆட்சி ,அதிகாரத்தில் உள்ளவர்கள்
  செய்கிறார்கள்.
 ஆனால்    அதிக  மேல் நிலையில் உள்ளவர்கள்
தனக்கென்று  எதுவும் செய்வதில்லை .
நமது ஒவ்வொரு செயலும் உலக நன்மைக்காக
எவ்வித பற்றும் இன்றி செய்வதே வேள்வி.
சாதாரண அறிவு வளர்ந்து
 ஞானம் வரவேண்டும்.
நம் செல்வம் ,நம் ஞானம்
 மற்றவர்களுக்கு
உதவுவதால் வளர்கிறது
என்பதை
மறக்கக்    கூடாது.
ஔவையார்   மற்றும்    நீதி நூல்கள் சொல்வது
இட்டார்   பெரியோர் ,இடாதார் இழி குலத்தோர்.

ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.

நாம்  கர்ம யோகத்தில் ஈடுபடவேண்டும். 

No comments: