Saturday, November 25, 2017

ஸ்ரீ மத் பகவத் கீதை --கர்மயோகம் --1

ஸ்ரீ  மத் பகவத் கீதை --கர்மயோகம்  --

       அர்ஜுனனுக்கு  மனதில் மிகவும்  கவலை.
உற்றார் -உறவினர்கள், குருமார்கள் ,
இஷ்ட மித்திர பந்துக்கள்
அனைவரையும்  எதிர்த்து போராடுவதால்
 ஏற்படும் தீய விளைவுகள்   ,
மரணம்  துக்கம் ,சோகம்.
அவனுக்குப் போர்
புரிய மனமில்லை.
 
   அவனுடைய ஐயங்கள்
 நீக்கி போரில் ஈடுபட வைக்க 
  ஸ்ரீ கிருஷ்ணர்  கர்மயோகம்
பற்றி விளக்குகிறார்.

     அர்ஜுனனிடம்   கிருஷ்ணன் 
  ஞானயோகம் ,கர்மயோகம்
பற்றி  விளக்கமளித்தார்.
ஞானயோகம்  என்பது
தத்துவங்களைப் பற்றி எண்ணுவது.
தத்துவவிசாரம் .
 விவேகம் ,துறவுநிலை,
பற்றற்ற நிலை  என்று 
 ஆத்ம சொரூபத்தை
 நேரடியாக அடைய முயல்வது
ஏற்பது  ஞானயோகம்.
 அவைகளை செயல் படுத்தி
கர்மங்களைப் பின்பற்றுவது
கர்மயோகம்.
 இந்த கர்மயோகத்தில்
அறிவு தெளிவடைகிறது.

      எண்ணத்தில்  ஈடுபடுபவர்கள்,
செயலில்  ஈடுபடுபவர்கள்

இருவருமே   இருப்பதால் தான் 
உலகம் இயங்குகிறது.

     இச்சா சக்தி ,ஞானசக்தி , கிரியா சக்தி
என்பது தொன்றுதொட்டு இயங்கிவருகின்றன.

No comments: