Saturday, July 29, 2017

రామచారితమాస --ராமசரிதமானஸ் -அயோத்யாகாண்டம் -முப்பத்தைந்து

    சீலமும் அன்பும் விடமுடியாது.
ராமரும் சங்கடப்பட்டார்.
துன்பமும் கடின  நடையும் அனைவரையும்
ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தின.
சில தேவர்களின்   மாயையாலும்
அவர்களின் அறிவு கவரப்பட்டது.
இரவு இரண்டாம்    ஜாமத்தில்  ராமர்  எழுந்தார்.
மந்திரியை அழைத்து தேரைப்பூட்டச் சொன்னார்.
தேர் செல்லும்   தடயம்  தெரியாமல் தேரை ஓட்டச் சொன்னார்.   மக்கள் அறியாமல் சென்றால் பின்தொடர மாட்டார்கள் .
சங்கரரை வணங்கி   மூவரும் தேரில் அமர்ந்தனர்.
விடிந்ததும் தேரையும் ,ராமர் லக்ஷமணனையும்  காணாமல்
மக்கள் "ராமா,"  ராமா !" என்று அழைத்துக்கொண்டே
தேட ஆரம்பித்தனர்.
 கப்பல் கவிழ்ந்து வாணிகம் நஷ்டம் ஏற்பட்டதுபோல்
தோன்றியது. ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொன்னார்கள்.
நமக்கு வருத்தம் ஏற்படும் என்று  நம்மை விட்டுவிட்டு .
ன்று விட்டார்    என பேசிக்கொண்டனர்.
அவர்கள் தன்னையே  நிந்தித்துக்கொண்டு,
மீன்களைப் புகழ்ந்தனர்.
மீன்கள் தங்களுக்குப் பிரியமான தண்ணீரை விட்டு வெளிவந்தால்  இறந்துவிடுகின்றன.
மனிதர்களுக்கு    அன்பானவர்களைப்  பிரிந்தால்
சாவு வருவதில்லை. மனிதப்பிறவி கேவலமானது ,.
இவ்வாறு புலம்பிக்கொண்டே வேதனையுடன்
அயோத்தியா திரும்பினர். அவர்களின் துயரம் வர்ணனைக்கு
அப்பாற்பட்டது.  பதினான்கு ஆண்டுகள் கழித்து   
தி ரும்புவார்  என்ற  நம்பிக்கையால் உயிரை விடவில்லை.
ஆண்களும் பெண்களும் ராமர் தரிசனத்திற்காக
விரதம்   இருந்தனர். தாமரை மலரும் , சகவா சக்வி பறவைகளும்  சூரியனின்றி கலை இழந்ததுபோல்
அயோத்யா மக்கள் கலை இழந்து காணப் பட்டனர்.

இங்கு   ராமர், லக்ஷ்மணன் ,சீதை  மூவரும் சிருங்க
பேர்பூரை  அடைந்தனர். அங்கு    கங்கை  நதிக் கரையில் இறங்கி  மூவரும்  வணங்கினர். கங்கை நதி அனைத்து
ஆனந்த   மங்கலத்திற்கு    மூலம்  . அது அனைவரின்
துன்பங்களைப் போக்கி  ஆனந்தம் கொடுக்கக் கூடிய நதி.

பல   துணைக்கதைகளை  சொல்லிக்கொண்டே  ராமர் கங்கையின் அலைகளை  பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அவர் அமைச்சருக்கும் , லக்ஷ்மனனுக்கும் சீதைக்கும்
கங்கையின் மகிமையை சொன்னார்.
இதற்கிடையில் அனைவரும் கங்கையில் குளித்தனர்.
அவர்களது களைப்பு  போய்விட்டது.
கங்கையின் புனித    நீர்  அருந்தியதுமே
மனம் மகிழ்ச்சி அடைந்தது.
ராமநாமத்தை ஜெபித்தாலே பிறப்பு புனர் ஜன்மம் என்ற பந்தங்களிடமிருந்து  விடுபடலாம்.
இங்கு   அவர்   மனித ரூபத்தில் வந்ததால் அவருக்கு
சிரமமும் சிரமம்வதும் என்பது அவர் லீலை யாகும்.

ராமர்    சச்சிதானந்த       ஸ்வரூபியான  சூர்யகுலத்துதித்த
பகவான்  ராமர்  மனித அவதாரம் எடுத்து
சம்சாரக் கடலை கடந்து செல்ல இவ்வாறு
கஷ்டங்களை சகிக்கிறார்  சகிப்பதுபோல் நடிக்கிறார்.

இப்பொழுது நிஷாத   நாட்டு  மன்னன் குகன் ராமர் வருகை
புரிந்த செய்தி அறிந்து பே ருவகை  அடைந்தான்.
அவன் தன் உற்றார்  உறவினர்களுடன்
பழங்கள் - கிழங்குகள் படகில் ஏற்றிஅமரை தர்சிக்க வந்தான். அவன்  எல்லை இல்லா   மகிழ்ச்சி  அடைந்தான்.
ராமரை  வணங்கி  அன்பளிப்புகளை  முன்னாள் வைத்தான்.
அவனுடைய இயற்கையான அன்பைக்கண்டு ராமர் அவனை
அருகில் அமரவைத்து நலம் விசாரித்தார்.
குகன்   உங்கள்      கமல   பாத  தரிசனம்   கண்டு
நலமாக  இருக்கிறேன் என்றான்.
இன்று  நான்  மிகவும் அதிர்ஷ்ட சாலி ஆகிவிட்டேன் .
இந்த பூமி , செல்வம் , வீடு எல்லாமே  உங்களுடையது தான்.
நான் என் குடும்பத்துடன்   உங்களுக்கு  சேவை  செய்ய தயாராக  இருக்கிறேன்.
நீங்கள் தயவு செய்து ஸ்ருங்கபெர்பூருக்கு  வாருங்கள்.
நீங்கள் வந்து    இந்த     அடிமையின்  கௌரவத்தை
அதிகரித்தால்  அனைவரும் என் அதிர்ஷ்டத்தைப் புகழ்வார்கள்.  இதைக்கேட்டு ராமர் சொன்னார்:--
நீ  சொன்னதெல்லாம் சத்தியம். ஆனால்   எனது  அப்பா  வேறு வேலை கொடுத்துள்ளார்.
அவர்    கட்டளைப்படி   நான் பதிநான்கு  ஆண்டுகள்  வரை
முனிகள்  போல்  விரதமிருந்து  ஆடை    அணிந்து
அவர்கள்  போல்  உணவு உண்டு  காட்டில்  இருக்க வேண்டும்.
கிராமத்தில் இருப்பது  சரி  அல்ல.   இதைக்  கேட்டு
குஹனுக்கு மிகவும்  வருத்தம் ஏற்பட்டது.

கிராமத்தின்  ஆண்களும்  பெண்களும்   ராமர் , லக்ஷ்மணன் மற்றும்   சீதையின் அழகு    கண்டு  தங்களுக்குள்
பலவி தமாகப்  பெசிக்கொண்டிருந்தனர்.
இந்த அழகான குழந்தைகளை  காட்டுக்கு   அனுப்பிய
பெற்றோர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்?
ஒருவன் சொன்னான்---அரசன்   செய்தது   சரியே.
இதனால்  இந்த சாக்கில் நமக்கு தரிசனம் செய்யும் வாய்ப்பு
நல்கியிருக்கிறார்.  அவர்கள்  தங்குவது  அசோக மரத்தின்  கீழ் அழகான இடம் என்று குகன்  நினைத்தான்.
ஸ்ரீ ராமருக்கு    அந்த    இடத்தைக்  காட்டினான்.
ஸ்ரீ ராமர்   அந்த இடம் மிகவும் அழகான  இடம் என்று கூறினார். நகரத்தவர்கள் அவர்களை வணங்கிவிட்டுச்  சென்றனர்.  ராமர்     சந்தியா  வந்தனம்  செய்ய புறப்பட்டார்.
 இதற்கிடையில் குகன்   தர்பையாலும் ,மென்மையான அழகான விரிப்பை அலங்கரித்தான். அதை மிகவும் மென்மையாகவும் ,புனிதமாகவும்    இருப்பதைப் பார்த்து ,
தொன்னையில்  பழங்களும் தண்ணீரும்  எடுத்து  வைத்தாள்.

No comments: