Saturday, May 6, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் --முப்பத்தொன்று

ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் --முப்பத்தொன்று

தசரதர்  மிகவும்  அமைதியற்ற நிலையில் ,
ராமரையும் இலக்ஷ்மணரையும் பார்த்து
ஆரத்தழுவினார். அவரால் அன்பு வேதனை
இரண்டும்  சேர்ந்து    பேச விடாமல்  தடுத்தது.
அப்பொழுது ரகுகுல திலகம்  ராமர்   மிகவும்
அன்புடன்  காலில்  விழுந்து  வணங்கி
கானகம் செல்ல அனுமதி கேட்டார்.
தந்தையே!  என்னை ஆசிர்வதியுங்கள்.
மகிழ்ச்சியான  நேரத்தில்   ஏன்  சோகமாக  
இருக்கிறீர்கள். அன்பின்    காரணமாக  
கடமை   ஆற்றுவதில்   குறை -தவறு
ஏற்பட்டால்   உலகில்   புகழ்    போய்விடும் .
நிந்திக்கப்படுவார்கள். 

No comments: