Tuesday, April 4, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் -பக்கம் எட்டு

ராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம் -பக்கம்  எட்டு


            மிகவும் ஆனந்தமாக  நகரத்தின் எல்லா ஆண்களும் பெண்களும் நல்லொழுக்கமாக அனைத்தையும் அலங்கரித்துக்கொண்டிருந்தனர். அரண்மனை நுழைவாயிலில் கூட்டம் கூடியது. சிலர் உள்ளே சென்றனர். சிலவெளியே வந்தனர். அனைவரின் முகத்திலும் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.
  ராமரின் பால்ய சிநேகிதர்கள் ராஜதிலக செய்தி கேட்டு மகிழ்ச்சியுடன் ராமரை சந்திக்க வந்தனர்.
அவர்களின் அன்பை அறிந்து ராமர் அவர்களுக்கு தக்க மரியாதை செய்தார்.  மென்மையான குரலில் நலம் விசாரித்தார்.

தன் அன்புத்தோழன் ராமரின் அனுமதி பெற்று  ,
தங்களுக்குள் ராமரின் பெருமையை கூறிக்கொண்டே வீட்டிற்குத் திரும்பினர்.
இவ்வுலகில் ராமர் போல் ஒழுக்கமுள்ளவர்கள் .அன்பாகப் பழகுபவர்கள்  யாருமே இல்லை என்றனர்.
நாம் எவ்வகையில்  எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
நமக்கும் ராமருக்கும் இறக்கும் உறவு  நிலைத்து இருக்கவேண்டும்.
நகரத்தில் உள்ள அனைவரின் ஆசைகளும் அதே.
ஆனால் கைகேயி மனதில் எரிந்து கொண்டிருந்தாள்.
தீயவர்களின் சேர்க்கையால் ஒருவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. தாழ்ந்த புத்தி உள்ளவர்கள் சொல்படி நடந்தால்
அறிவு மழுங்கிவிடும்.
  மாலை நேரம் ராஜா தசரதர் கைகேயியின் மனைக்கு வந்தார்.  அவர்வருகை  அன்பே உருவெடுத்து
கொடுமையிடம் வந்ததுபோல் இருந்தது.

 கோப பவனம் என்ற பெயரைக்கேட்டதுமே ராஜா பயந்துவிட்டார். அச்சத்தால் அவர் கால்கள் நகரவில்லை. 

No comments: