Monday, April 24, 2017

ராமசரித மானஸ் ---அயோத்யா காண்டம் --இருபத்தொன்று

ராமசரித மானஸ்  ---அயோத்யா காண்டம் --இருபத்தொன்று

      கௌசல்யா  ராமரிடம் சொன்னாள்--"வனவாசம் சென்றால் வன தேவதைகள் உன்னுடைய தந்தைஆவார்கள் வன தேவிகள் உன்னுடைய தாயார் ஆவார்கள். அங்குள்ள மிருகங்கள் பறவைகள் உன்னுடைய தாமரை பாதங்களுக்கு தொண்டர்கள் ஆவார்கள். அரசர்களுக்கு இறுதியில் வனவாசம் செய்வது சரியானது தான். உன் நிலைகண்டு தான் எனக்கு மனதில் வேதனையாக உள்ளது.

 நீ ரகுவம்சத்தின் திலகம். காடு மிகவும் அதிர்ஷ்டம் செய்துள்ளது. அயோத்தியா அதிர்ஷடமில்லாமல் போய் விட்டது.  நானும் உன்னுடன் வருவேன் என்றால் உனக்கு என் மேல்    சந்தேகம்  வரும். இந்த கூட வரும் சாக்கில் அம்மா என்னைத்   தடுக்க விரும்புகிறாள்.
மகனே!நீ எல்லோருக்குமே மிகவும் அன்பானவன்.
உயிருக்கே உயிரானவன் நீ ., எல்லோரின் இதயத்துக்கும்
வாழ்க்கை நீ தான்.
நீ சொல்கிறாய்-நான் காட்டிற்கு செல்கிறேன்  .  எ
நீ    சொல்வதைக்கேட்டு    நான்  வருந்துகிறேன்.
இதை நினைத்து    பொய்யான  அன்பை அதிகரித்து நான் பிடிவாதம்  செய்ய  மாட்டேன்.    நான்  உனக்கு   திருஷ்டி சுத்துகிறேன்.  அம்மாவின் உறவை ஏற்றுக்கொள்.    என்னை
மறந்துவிடாதே.
கோபாலா!எல்லா தேவர்களும் முன்னோர்களும்  கண்களை இமைகள் காப்பதுபோல்    உன்னைக் காக்கட்டும். உன்னுடைய    வனவாசம்  பதினான்கு ஆண்டுகள் தண்ணீர் என்றால் ,  உனக்கு அன்பானவர்களு ம், குடும்பத்தவர்களும்  
மீன்கள் நீ அறத்தின் அச்சு.  இரக்கத்தின் சுரங்கம்.
எல்லோரும் உயிருடன்    இருக்கும் போதே சந்திக்கும் முயற்சியில் யோசனை   செய்.
நான் உனக்காக அனைத்தும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்.   நீ சேவகர்கள்  ,  குடும்பத்தவர்கள், நகரமக்கள்  அனைவரையும்  அனாதைகளாக்கிவிட்டு, சுகமாக  வனத்திற்குச்  செல்.   இன்று அனைவரின் செய்த புண்ணியத்திற்கு  பலன்  கிடைத்து விட்டது. கடினமான காலம்    எல்லாமே நமக்கு விபரீதமாகிவிட்டது.  இவ்வாறு மிகவும்    புலம்பிவிட்டு    தன்னை  மிகவும்   துரதிர்ஷ்டசாலி என்றறிந்து ஸ்ரீ ராமரின்   கால்களைப் பற்றி சுற்றிக்கொண்டாள்.
மனதில் பயங்கரமான    துன்பம்  சூழ்ந்து கொண்டது. அந்த சமயம்    பல வித  புலம்பல் , அவைகளை  வர்ணிக்க முடியாது. ராமர் அம்மாவைத் தூக்கி , இதயத்துடன் அணைத்துக்கொண்டார்.  பிறகு மென்மையான  சொற்களால்  பேசினான்.  அதே  நேரம்  இந்த  செய்தி    கேட்டு  சீதை ஓடிவந்தாள். பிறகு மாமியாருக்கருகில்
அவர்கள்    இருவரின் பாதங்களை வந்தனம் செய்து  தலை குனிந்து அமர்ந்து  கொண்டாள். மாமியார் மென்மையான குரலில்  ஆசிகள் வழங்கினார். சீதையின்   இளமை, அழகு கண்டு  கவலை அடைந்தான். அழகின் ராசியும்  பவித்திரமான    பதியின்  மேலுள்ள அன்பையும் கொண்ட  சீதை  தலை  கவிழ்ந்து வருத்தமுடன் இருப்பதை
கௌசல்யா வால்  சகிக்க முடியவில்லை.

No comments: