Tuesday, February 21, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -எண்பத்திரண்டு

 அரசர் மணமகன் வீட்டார் மகிழ ,
தங்க கலசங்களில்  பால்,சர்பத்,குளிர்ந்தநீர் .
குளிர்பானங்கள் , அமிர்தத்திற்குச் சமமான எல்லாவித
பலகாரங்கள் ,பலவித அழகான பாத்திரங்களில் அனுப்பினார். உத்தமமான பழங்கள், பலவித பொருள்களை அன்பளிப்பாக அனுப்பினார்.
நகைகள், துணிகள், பலவித விலைஉயர்ந்த ரத்தினங்கள் ,
பலவித பறவைகள், மிருகங்கள், குதிரைகள், யானைகள் , பலவித சாவாரிகள் அனுப்பிவைத்தார்.

இவைகளைத்தவிர  பலவித வாசனைப் பொருட்கள் , மங்கள திரவங்கள் அனுப்பினார்.

தயிர் ,அவுல் , பலவித பரிசுகள் காவடியில் நிரப்பி
வேலையாட்கள் கொண்டுவந்தனர்.

வரவேற்பு குழுவினருக்கு , மணமகன் வீட்டார் ஊர்வலம்
தென்பட்டதும் மிகவும் மகிழ்ந்தனர். வரவேற்பாளர்களின்
அணிவகுப்பைக்கண்டு மணமகன் வீட்டார் மகிழ்ந்தனர்.முரசுகள் முழங்கின.

சிலர் பரஸ்பர சந்திப்புக்காக மிகவிரைவாக ஓடிவந்தனர்.
இரண்டு சமுத்திரங்கள் ஆனந்தமாக சந்தித்ததுபோல் இருந்தது.

தேவலோக அழகிகள் பூ மழைபொழிந்து  பாடிக்கொண்டிருந்தனர். தேவர்கள் மிக மகிழ்ந்து
முரசுகளை வாசித்தனர்.
வரவேற்புக்  குழுவினர் தாங்கள் கொண்டுவந்த பொருட்களை    தசரதருக்கு  முன்னால்  வைத்தனர். மிகவும் பணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டினர்.

அரசர் தசரதர் அன்புடன் அந்த பொருட்களை ஏற்றுக்கொண்டார்.  பிறகு அவர்களுக்கு அன்பளிப்புகள் அளித்தார். பிறகு யாசிப்பவர்களுக்கு
கொடுக்கப்பட்டது.
பிறகு பூஜை மரியாதையுடன் வரவேற்பாளர்கள் அவர்களை
திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர் .
அங்குள்ள பொருட்கள் கண்டு குபேரனே தான் தான் செல்வந்தன் என்ற கர்வத்தை விட்டுவிட்டார்.
மிக அழகான ஜானவாசம். எல்லோருக்கும் எல்லாவித வசதிகளுடன்.
சீதை  மணமகன் ஊர்வலம் ஜனகபுரிக்கு வந்தது தெரிந்ததும்
தன்னுடைய மகிமையைக் காட்டினார்.
 பிரார்த்தித்து  எல்லாவித சித்திகளையும் அழைத்து ,
அவர்களை ராஜா தசரதருக்கு விருந்து உபசார பணிவிடைகள்  செய்ய அனுப்பினார்.
சீதையின் கட்டளைபெற்றதும் , அனைத்து சித்திகளும்
மாப்பிள்ளை மற்றும் ஊர்வலத்தார்  உள்ள இடத்திற்குச் சென்றனர். அவர்கள் அனைத்துவித சம்பத்துக்களும்
இந்திரபுரியின் கேளிக்கை களையும் எடுத்துச்சென்றனர்.



No comments: