Wednesday, January 18, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --நாற்பத்தொன்பது.

 
 அரசன் பிரதாப் பானு ஒரு  நாள் வேட்டைக்குப் புறப்பட்டான்.

விந்தியமலையின் அடர்ந்த காட்டுப்பகுதியில்
  மிகவும் உத்தமவகை
மான்களை வேட்டை ஆடினான்.
வனத்தில் சுற்றி அலையும்  பொழுது
ஒரு விசித்திரமான  பன்றியைப் பார்த்தான்.
அதனுடைய பற்கள் நிலவு தேய்ந்தது போல்  இருந்தன.
அது நிலவை விழுங்க முடியாமல் , வாயிக்குள் அடங்காமல்
இருப்பது போன்று தோன்றியது.
இதுதான் பயங்கரமான  பன்னியின் அழகு.
அதன் உடல் மிகப்பெரிதாக பருத்து இருந்தது.
சிறிய காலடி சத்தம் கேட்டதுமே அது எச்சரிக்கையுடன் ஓடியது.

அரசன் அதை வேட்டை ஆட  தொடர்ந்தான். அவன் பன்றியிடம் நீ உன்னைக்காக்க முடியாது என்று அறைகூவல் விடுத்தான்.
மிகவேக மாக  குதிரையை விரட்டினான். பானங்களைத்தொடுத்தான்.
ஆனால் பன்றி தப்பித்து வேகமாக ஓடியது, அரசனும் பின் தொடர்ந்தான்.
வெகு தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் சென்று விட்டான்.
பன்றி ஒரு மலை குஹைக்குள் சென்று விட்டது.
அடர்ந்த காட்டுக்குள் சென்றதால் அரசனுக்கு வலி தெரியவில்லை.
தாகமும் அதிகரித்தது. தண்ணீர் தேடிச் சென்றான். அங்கே ஒரு முனிவரின் ஆஷ்ரமம் தென்பட்டது.
அந்த ஆஷ்ரமத்தில் கபட வேடமிட்ட ,,
 பிரதப்பானுவால் தோற்கடிக்கப்பட்ட
அரசன் தான் இருந்தான்.
தாகத்தின் தாக்கத்தால் பிரதாப் பானுவுக்கு
 அவனை அடையாளம் தெரியவில்லை.
 ஆனால் முனிவர் வேடத்தில் இருந்த
அந்த மன்னனுக்கு  பிரதாப் பானுவை தெரிந்துவிட்டது.
அவன் போரில் தோற்றதால் வேதனை அடைந்து
வீட்டிற்குச் செல்லாமல்,
காட்டிற்குள் வந்து ஆஷ்ரமம் கட்டி வசித்துவந்தான்.
பிரதாப் பானுவிற்கு நல்ல நேரம் தனக்கு கெட்ட  நேரம் என உணர்ந்து  மனதில் வெறுப்புடன்   காட்டிற்கு வந்து  தங்கிவிட்டான்.
தரித்திரன் போன்று கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு
தவ வேடத்தில் வாழ்ந்துவந்தான்.
அவன் தன ராஜபோக வாழ்க்கையை நினைத்து வருந்தினான்.



அந்த முனிவரின் தோற்றம் கண்டு பிரதாப் பானு
அவனை மிகப்பெரிய முனி என்று நினைத்தான்.
அந்த முனிவரை வணங்கினான்.
ஆனால் அந்த  ராஜா  தன் பெயரைச் சொல்லவில்லை.
அரசன் தாகத்தில் இருந்ததால் அவன்
அரசருக்கு தண்ணீர் இருக்கும் ஏரியைக் காட்டினான்.
 அரசன் நீர் அருந்தி , ஸ்நானம் செய்து களைப்பைப்
போக்கிக்கொண்டான்.
 அந்த முனிவர் அரசனத்  தன்  ஆஷ்ரமத்திற்கு
அழைத்துச் சென்றான்.தவசி  ராஜாவிடம் மென்மையாகப் கேட்டான் :-

நீ யார்? அழகான இளைஞனாக இருந்தாலும் ,
உயிரை பொருட்படுத்தாமல் ,
காட்டில் ஏன் தனியாக சுற்றிக்கொண்டிருக்கிறாய்?
உன்னுடைய  சக்கரவர்த்தி அரச லக்ஷணம் பார்த்து எனக்கு
உங்கள் மேல் தயை ஏற்படுகிறது.

 அரசன்  பதில் சொன்னான் --
"முநீஸ்வரரே ! நான் ராஜா உதய பானுவின்
அமைச்சர். வேட்டை தேடி சுற்றும் பொது வழி தவறிவிட்டது.
அதிக அதிர்ஷ்டம் செய்ததால்
இங்கே வந்து உங்களை தரிசனம் செய்தேன்.

  எனக்கு உங்கள் தர்சனம் துர்லபமானது.
அதனால் எனக்கு நன்மை ஏற்படும் என்று தெரிகிறது.
முனிவர் சொன்னார் --"இருள ஆரம்பித்துவிட்டது.
உன்னுடைய நகரம் இங்கிருந்து எழுபது மைல் தூரத்தில் உள்ளது.
நல்லவனே,  பயங்கர இருண்ட இரவு. அடர்ந்த காடு. வழியில்லை. நீ இங்கேயே தங்கிவிடு. காலையில் போ".

   துளசிதாசர் சொல்கிறார்--எதிர்காலம் எப்படி உள்ளதோ,
 அப்படியே உதவி கிடைக்கிறது. அதுவாகவே  கிடைக்கிறது,
அல்லது  உதவி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறது.

   ராஜா  மிக நன்று. உங்கள் கட்டளையை சிரமேற்கொண்டு
தங்குகிறேன். குதிரையை மரத்தில் கட்டிவிட்டு,
அவரை பல விதத்திலும் புகழ்ந்தார். அவரின் சரணங்களை வணங்கி
தன்  பாக்கியத்தை நினைத்து புகழ்ந்துகொண்டார்.

   பிறகு தவசியிடம் ,  "பிரபோ!நான் தங்களை என் தந்தையாக நினைக்கிறேன்.  முனிவரே!என்னை தங்கள் மகனாக கருதி ,
சேவகனாக பாவித்து  உங்கள் பெயரையும் ,இடத்தையும்
விரிவாகக் கூறவும்.
அரசனுக்கு அவரைத் தெரியவில்லை.
ஆனால் அவனுக்கு ராஜாவைத் தெரிந்தது.

  ராஜாவின் இதயம் சுத்தமானது.
அவன் கபடத்தில் கெட்டிக்காரன்.
அவன் விரோதி. க்ஷத்திரியன். கபடம் செய்வதில்  கெட்டிக்காரன்.

அவன் வஞ்சனையாலும் ,
பலத்தாலும் தன்வேலையை  முடிக்க விரும்புகிறார்.
அவன் கபடத்துடன் மென்மையாகப் பேசினான்---
இப்பொழுது என் பெயர் பிச்சைக்காரன்.
ஏனென்றால் எங்களிடம் பணம் இல்லை.
வீடு-வாசல் இல்லை.
பிரதாப்  பானு சொன்னான்---உங்களைப்போன்ற விஞ்ஞான
 ஆராய்ச்சியில் ஈடுபடுவோர்,மேலும் அபிமானம் இல்லாமல் இருப்பவசர்கள்  தங்கள் ஸ்வரூபத்தை எப்பொழுதும் மறைத்துவிடுகிறார்கள்.
ஏனென்றால் கெட்ட  வேடதாரியாக  இருப்பதில்  தான்  எல்லாவிதமான நன்மையையும் இருக்கிறது.  சாதுவேஷத்தில் மரியாதை இருந்தாலும்
வீழ்ச்சியும் சேர்ந்தே இருக்கிறது. முற்றிலும் அகங்காரம்,மமதை மரியாதை
 இன்றி இருத்தல்  இறைவனுக்குப் பிடித்த விஷயம்.
உங்களைப்போன்ற  ஏழை , பிச்சைக்காரன் , வீடுவாசல்  இல்லாதவர்களைப்
பார்த்து சிவனும் பிரம்மாவும் சந்தேகப்படுவார்கள்.
இவர்கள் உண்மையான சாதுக்களா எ அல்லது  பிச்சைக்காரர்களா ?

  நீங்கள் எப்படிப்பட்டவர்   ஆனாலும்   உங்கள் சரணங்களை வணங்குகிறேன்.  நீங்கள் என்மேல் கிருபை காட்டுங்கள்.
தன்மேல் அரசனின் இயற்கையான அன்பையும்
நம்பிக்கையையும்  பார்த்து , எல்லாவிதத்திலும்
 ராஜனை தன் வசப்படுத்தி , அதிக அன்பைக்காட்டி அந்த கபட தவசி சொன்னான்----அரசே!கேள், நான் உன்னிடம் உண்மையை சொல்கிறேன்.
நான் இங்கே இருந்து நீண்ட காலம் கழிந்துவிட்டது.

இப்பொழுதுவரை என்னை  யாரும்  சந்திக்கவில்லை.
 நான் யாரிடமும் என்னை வெளிகாட்டிக்கொள்ளவில்லை.
ஏனென்றால்  கௌரவம் நெருப்பு போன்றது. அது தவம் என்ற வனத்தை
பஸ்மாமாக்கிவிடுகிறது.

துளசிதாசர் சொல்கிறார் :--

அழகான வேடத்தைப்பார்த்து
முட்டாள் மட்டுமல்ல , கெட்டிக்காரனும் ஏமாந்து விடுகிறான்,
அழகான மயிலைப்பார். அதன்   உணவு பாம்பு.

ஸ்ரீ ஹரியைத்தவிர யாரிடமும் எந்த பலனும் இல்லை. ஸ்ரீ ஹரி க்கு
சொல்லாமலேயே அனைத்தும்  தெரியும். சொல்,
உலகத்தை நேசிப்பதால் என்ன சித்திகள் கிடைக்கும்.?

  நீ பவித்திரமானவன். சிறந்த புத்திமான்.அதனால்  நீ எனக்கு அன்பானவன்.

உனக்கும் என்மேல் அன்பும் நம்பிக்கையும் உள்ளது.
இப்பொழுது உன்னிடம் ஏதாவது  மறைத்தால் எனக்கு பயங்கர தோஷம் உண்டாகும்.

  தபஸ்வி உதாசீனமாகப் பேச பேச ராஜாவுக்கு
 அவன் மேல் நம்பிக்கை அதிகமாகியது.
 கொக்கு போன்று தியானம் செய்யும் கபட முனி
 அரசனை சொல், செயல்,மனத்தால்
அவன் வசம் ஆகிவிட்டத்தை தெரிந்து கொண்டு
சொன்னான்----சகோதரா! என் பெயர் ஏகதனு.
இதைக்கேட்டு ராஜா  ,என்னை உங்கள் அன்பனாக நினைத்து
உங்கள் பெயரின்  பொருளை விளக்குங்கள்  என்றார்.

மகனே! ஆச்சரியப்படாதே. தவத்தால் எதுவுமே கடினமல்ல.
தவத்தின் வலிமையினால் தான் விஷ்ணு உலகத்தைப்
காப்பவர்  ஆனார்.
தவத்தின்  வலிமையால்  தான் ருத்திரர் சம்ஹாரம் செய்கிறார்.
உலகில் தவத்தால் கிட்டாத பொருள் ஏதும் இல்லை.
இதைக்கேட்டதும்   அரசனுக்கு மிகுந்த பற்று உண்டாகியது.
அப்பொழுது அவன் பழைய கதைகளைச் சொல்ல  ஆரம்பித்தான்.


  

No comments: