Tuesday, December 20, 2016

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -பகுதி -பதினைந்து .

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -பகுதி -பதினைந்து .

          யமதூதர்களின் முகத்தில் கரிபூச  ,
         இந்த    வையகத்தில்
         யமுனை போன்றது  ராமநாமம் ,
          ஜீவன்  களுக்கு முக்தி  அளிக்க
           காசிஎன்றே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
           ராமருக்கு பவித்திரமான
           துளசி  போன்று பிரியமானது.
           துளசி தாசருக்கு அவரின்
            தாயார் ஹுளசி போன்று பிரியமானது.
            நன்மை அளிக்கக்  கூடியது.

           இந்த ராமகதை சிவபகவானுக்கு
            நர்மதை போன்று பிரியமானது.
           அனைத்து சித்திகளும் ,சுகங்களும் ,
            செல்வங்களும் தரக்கூடியது.

            நல்ல குணமுள்ள தேவர்களை உண்டாக்கி
            வளர்க்கின்ற  அன்னை
            அதிதிக்கு  சமமானது.
             ராமரின்  பக்தி மற்றும் அன்பின்
              உயர்ந்த இறுதி எல்லை போன்றது.
              ராமகதை  மந்தாக்கினி  நதி  போன்றது.
             அழகான மனமுள்ள சித்திரக்கூடம்  போன்றது.
             அழகான அன்பே வனம்.
            அதில் சீதாராமர் சஞ்சரிக்கிறார்.

         ராமரின் குணம் அழகான சிந்தனை மணி .
         சாதுக்களுக்கு நல்லறிவு என்ற பெண்போன்று
         அழகான சிங்காரம்.
        ஸ்ரீ ராமரின்  நல்ல  குணங்கள்
        உலகிற்கு  நன்மை  அளிப்பவை.
        முக்தி  அளிப்பவை.
       செல்வமளிப்பவை .
       அறம்  அளிப்பவை.
        தெய்வீக  இடமளிப்பவை.

     ஞானம், வைராக்கியம், யோகம்  பெற
    சத்குரு  போன்றவை.
    உலகிலுள்ள அதி பயங்கர  நோய்களெல்லாம் தீர்க்கும்
    தேவவைத்தியர்  அஷ்வினி குமார் போன்றவை.

   ஸ்ரீ ராமரின் அன்பை உண்டாக்கும்
   அன்னை.தந்தை போன்றவை.
     எல்லா விரதங்கள், அறங்கள், நியமங்களின் விதைகள்.
     கதையின் குணமும்  பண்பும்
    பாவம் , துன்பம் , சோகம்  அனைத்தையும்
    அழிக்கக்கூடியவை.
   எண்ணங்கள்  செயல்பட ஞானம் தரும்
   அரசனின் சூரவீர அமைச்சர்  போன்றவை.
   கடக்க  முடியாத பேராசைக்கடலை
    வற்றவைக்கின்ற   அகஸ்த்திய முனி போன்றவை.
   பக்தர்களின்  மனம் என்ற வனத்தில்
    குடியமர்ந்திருக்கின்ற
  காம, குரோத,கலியுகத்தின் பாபங்களாகிய
 யானைகளை  வதம்  செய்யும் சிங்கக்குட்டிகள்.
 சிவனால் பூஜிக்கப்பட்ட  அன்பான விருந்தாளி.
தரித்திரம் என்ற காட்டுத்தீயை அணைக்கின்ற
விருப்பங்களை  நிறைவேற்றுகின்ற  மேகங்கள்.
 உலக மாயைகள் என்ற விஷயங்கள் என்ற  விஷத்தை
போக்குவதற்கான  மந்திரங்கள்.மகாமணிகள்.
 தலை எழுத்தை  தீயபலன்களை நீக்குகின்ற ஆற்றல் படித்தவை.
அறியாமை என்ற  இருளகற்றும் சூரியக்கதிர்கள்.
தொண்டன் என்ற நெல்வயலை பேணிக்காக்கும்
மேகங்கள்  போன்றவை.
 மனம்விரும்பும் பொருள்கள்  கொடுப்பதில்
கற்பகமரம் போன்றவை.
தொண்டாற்றுவதில் ஹரி மற்றும் எளியமுறையில்
சுகமளிப்பவை.
நல்ல கவியர்களின்  பனிக்கால மனம் என்ற ஆகாயத்தில்
அலங்கரிக்கின்ற நக்ஷத்திரங்களைப்  போன்றவை.
ஸ்ரீ  ராமரின் பக்தர்களுக்கு  வாழ்க்கைதனமே
ராமரின் ஸ்ரேஷ்ட  குணங்கள்.
அனைத்து புண்யங்களின் பலன்கள் தருபவை.
உலகத்திற்கு  வஞ்சனை-கபடமில்லா
யதார்த்த  நன்மைகள்  தரும் சாதுக்கள் போன்றவை.
தொண்டர்களின் மனம் என்ற  மானசரோவரில்  நீந்தும்
அன்னப் பறவைகள். பவித்திரமான  மனிதனை
ஆக்குவதில் கங்கையின் தொடர் அலைகள்  போன்றவை.

 ஸ்ரீ ராமரின்  குணங்கள்  என்ற சமூகம்
  தீயவளிகள், தீய  தர்க்கங்கள், ,
தீய நடத்தைகள் ,
கலியுக கபட நாடகங்கள் ,
கர்வங்கள், ஏமாற்றும் பக்திகள்
போன்ற விறகுகளுக்கு
 அக்னிபோன்றவை.

ராமரின்  குணங்கள் பௌர்ணமி  நிலவின்  கதிர்கள் போன்று
எல்லோருக்கும்  சுகமளிப்பவை.
நல்லவை என்ற அல்லிமலருக்கும் ,
சக்ரவாகப் பறவைக்கும் சிறப்பான உயர்ந்த
நன்மை  அளிக்கக் கூடியவை.

துளசிதாசர்  சிவனிடம் பார்வதி கேட்ட வினாவிற்கு
சிவபகவான் அளித்த  விரிவான  விளக்கத்தைக்
பாடிச் சொல்லுவார். 

No comments: