Monday, December 26, 2016

ராமசரிதமானஸ்- பாலகாண்டம் --இருபத்தி மூன்று

ராமசரிதமானஸ்- பாலகாண்டம் --இருபத்தி மூன்று
----------------------------------------------------------------------------------------------
  உமாதேவி சென்றதும்
தக்ஷனின் மகள் சதிக்கு நல்லது நடக்காது.
நான் விளக்கியும் சந்தேகம் நீங்கவில்லை  என்றால்
கடவுள் எதிர்மாறியாக உள்ளார்.

 இப்பொழுது உமாவிற்கு நலமில்லை.
 ராமர் எதை அமைத்து வைத்திருக்கிறாரோ
அதே , நடக்கும்.
தர்க்கம் செய்வதால் எதுவும் நடக்காது.
 இவ்வாறு சொல்லி சிவன்
ராமநாமத்தை ஜபிக்க ஆரம்பித்தார்.
 சதி ராமரின் இருப்பிடம் சென்றார்.
சதி தன் தோற்றத்தை சீதாவாக
 மாற்றிக்கொண்டு சென்றார்.
அவர் எண்ணப்படி மனிதர்களின்
மன்னன் ராமர் வந்துகொண்டிருக்கிறார்.
 சதியின் போலி  தோற்றம் கண்டு ,
லக்ஷ்மணன் பிரமித்துவிட்டார்.
அவர் மனதில் சீதை என்ற பிரமை உண்டாகிவிட்டது.
அவரால் எதுவும் செய்யமுடியவில்லை.
மிகவும் கம்பீரமாக நின்றார்.
அவருக்கு ராமரின் சக்தி தெரியும்.
 சகலமும் தெரிந்த  ,
அனைவரின் மனதையும் புரிந்த  ராமர்
சதியின் கபட நாடகத்தைத் தெரிந்துகொண்டார்.
அவரை தியானித்தாலே
அறியாமை போய்விடும்.
அதே அனைத்துஞானமும் கொண்ட ராமர்.
 அங்கும் சதி தன்னை மறைக்க முயன்றார்.
அது பெண்ணின் குணம்.
மாயையின் பலத்தை மனதில் வர்ணித்து ,
ராமர் சிரித்து மென்மையாக பேசினார் :-
முதலில் கைகள் கூப்பி சதியை வணங்கினார்.
 தன் தந்தைபெயருடன் தன் பெயரையும் சொன்னார்.
ரிஷபவாகனர் சிவன் எங்கே ?
இங்கே நீங்கள் காட்டில் தனியாக ஏன்
சுற்றிக்கொண்டிருக்கிரீர்கள். ?
ஸ்ரீ ராமரின் மென்மையான,
ரஹசியம் நிறைந்த விசாரிப்பாள்
 சதிக்கு நாணம் வந்துவிட்டது.
பயந்துகொண்டே பேசாமல் சிவனிடம் சென்றார்.
நான் சங்கரர் சொல்வதை ஏற்கவில்லை.
அறியாமையால் ராமர் மீது குற்றம் சாட்டினேன்.
இப்பொழுது சிவனுக்கு என்ன பதில் சொல்லுவேன்?
என்ற கவலை ஏற்பட்டது.
மனதில் பயங்கர எரிச்சல் உண்டாகியது.
ராமர் சதியின்  கவலையை தெரிந்து
தன் சக்தியைக் காட்டினார்.
ராமர் சீதை  லக்குமனனுடன்
முன்னே போய்க்கொண்டிரிந்தார்.
தன் சச்சிதானந்த உருவம் காட்ட ,
 பிரிவுத் துன்ப நிலை கற்பனை மாற்ற
இயற்கைநிலையாக  மாறினார்.
பின்னால் திரும்பி பார்த்தாலும்
சகோதரன்  லக்ஷ்மணனுடனும்
சீதையுடனும் அழகாக தென்பட்டார்.
எங்குபார்த்தாலும் ராமர் காட்சியளித்தார்.
நல்ல மேன்மையான சித்தர்களும் ,முனிவர்களும்
அவருக்கு சேவை செய்துகொண்டிருந்தனர்.

No comments: