Sunday, December 25, 2016

பாலகாண்டம்-१८ பதினெட்டு -ராமசரிதமானஸ் -துளசிதாசர்.

பாலகாண்டம்-பதினேழு -ராமசரிதமானஸ் -துளசிதாசர்.

  துளசிதாசர்   சொல்கிறார் :--

           நான்   ராமசரித மானஸ்  இயற்றப்பட்ட காரணம்,
      அது  எத்தகைய  நூல் , இயற்றப்பட்ட காரணங்கள்

    முதலியவற்றை  ஸ்ரீ உமா -மகேஷ்வரரை  வணங்கி சொல்கிறேன்.

   சிவனின்  கிருபையால் நல்லறிவு பெற்று
   இந்த துளசிதாசர்

  "ராமசரிதமானஸ் "  என்ற  நூலின்
  கவிஞர் ஆகிவிட்டார்.
 என் அறிவுக்குத்தக்கபடி
 இதை அழகாக மனம்
  கவரும்படி எழுதியிருக்கிறேன்.

சத்  ஜனங்களே !
   அழகான மனதுடன் கேட்டு
    தங்களை  திருத்திக்கொள்ளுங்கள்.

     அழகான அறிவு  என்பது பூமி.
     இதயம்  என்பது  ஆழமான இடம்.
     வேத-புராணங்கள்  சமுத்திரம்.
     சாதுக்கள் -சந்நியாசிகள்  மேகங்கள்.
     அவர்கள் ராமர் என்ற புகழ்பெற்ற,
     அழகான இனிமையான,
   மனோஹரமான  நன்மை அளிக்கும்

     தண்ணீரை
   மழையாகப் பொழிகின்றனர்.
அவரின் லீலைகளை
விரிவாக வர்ணிக்கின்றனர்.
அதுதான்  ராமரின் புகழ் என்ற நீரின்
 நிர்மலத்தன்மை யாகும்.
அது களங்கத்தை அழித்துவிடும்.
அந்த நீர் இனிமை, அழகு மற்றும் குளிர்ச்சி
  கலந்த
பக்தியின் அன்பு.
இந்த நீர் நற்செயல்கள் என்ற
நெல்பயிருக்கு
பயனளிக்கக் கூடியது.
ராம பக்தர்களுக்கு வாழ்க்கை அளிக்கக் கூடியது,
அந்த பரிசுத்தமான ராமரின் புகழ் நீர்
அறிவு என்ற பூமியில்  விழுந்து குறுகி
 அழகான காத்து என்ற வழியில் ஓடியது.
மனம் என்ற உயரிய இடம் பெற்று அங்கேய வசிக்கிறது.
அங்கேயே பழமை அடைந்து அழகான ருசிகரமான
குளிர்ந்த சுகமளிக்கக் கூடியதக் அமர்ந்துவிடுகிறது.
 இந்த பரிசுத்தமான அழகான நதியின் நான்கு கரைகள்
 காக்புசுண்டி  கருடனுக்குக் கூறியது,
சிவன்  பார்வதிக்குக் கூறியது,
யாஞ்க்ய வல்கியர் பாரத்வாஜ முனிக்குக் கூறியது,
துளசிதாசர் மற்றும் சாது-சந்நியாசிகள் .
  ஏழு  காண்டங்கள் இந்த நதியின்
  அழகான ஏழு  படிகள்.
இதை அறிவுக்கண்ணால் பார்த்தாலே
 மனம் மகிழ்ச்சியடைகிறது
ராமரின் குணங்கள் பண்புகளை
  தடையில்லால் வர்ணிப்பதே
இந்த அழகான ராமகதை என்ற நதியில் அதிக ஆழமாகும்.

  ஸ்ரீ ராமச்சந்திரர் மற்றும் சீதையின்
புகழ் அமிர்தம் போன்ற தண்ணீர்.
 இதில் கொடுக்கப்பட்ட உவமைகள்
 அதே   அலைகளின் அழகான   கேளிக்கைகள்.
 அழகான  நாலடிகள்தான்
   இதில் அடர்ந்து பரந்திருக்கும்
      பெண்   தாமரைகள்.

கவிதையின்  யுக்திகள்  அழகான முத்துக்களை
உண்டாக்கும்    அழகான  சிப்பிகள்.
 இதில்  உள்ள சந்தங்கள், ஈரடிகள், எதிரீரடிகள் ,
இதில் அலங்கரிக்கும் பலவண்ண  தாமரைகள்.
ஒப்பிடமுடியாத  பொருள்கள், உயர்ந்த  பாவங்கள்,
அழகான  மொழிகள் தான்  மகரந்தங்களும் மணமும்.

புண்ணியங்களின் சக்திகள்
 வண்டுகளின்  வரிசைகள்.
ஞானம் ,வைராக்கியம்,
எண்ணங்கள் போன்றவை .
கவிதையின் ஓசை நயம்,
 குரல் ஒலி யுக்தி, குணம் ,ஜாதிகள்  போன்றவை
அநேக  விதமான அழகான  மீன்கள்.
 அறம்,பொருள், இன்பம் ,வீடு  போன்ற
 நான்கும்   ஞானம் ,
 அறிவியல் எண்ணங்கள் கூறுவது,
காவியத்தின்  ஒன்பது  ரசங்கள் ,
ஜபம் ,தபம், யோகம்,வைராக்கியம்  போன்றவைகள்
இந்த  அழகான நதியின்  நீர்வாழ் பிராணிகள்.



No comments: