Wednesday, December 7, 2016

பாலகாண்டம் --௫. 5 இராமச்சரிதமானசம்-துளசிதாஸ் பாகம் -5.

பாலகாண்டம் --௫. 5  இராமச்சரிதமானசம்-துளசிதாஸ் பாகம் -5.

      இறைவனால் படைக்கப்பட்ட
    தேவர்கள், அரக்கர்கள், மனிதர்கள், நாகங்கள்,
    பிரேதங்கள்,         முன்னோர்கள், கந்தர்வர்கள், கின்னர்கள்,
     மாயாவிகள்  அனைவரையும்  வணங்கு கிறேன்.
    இப்பொழுது  அனைவருமே என்மேல்  கிருபை காட்டுங்கள்.

   எண்பத்திநான்கு  லக்ஷம் யோனிகளில்
    தோன்றும் ஜீவராசிகள்
   வியர்வையிலிருந்தும், காற்றிலிருந்தும்,
    ஆகாயத்திலிருந்தும், தண்ணீரிலிருந்தும்  
    படைத்த அனைத்தும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியால்.
   மனிதனிடம் தோன்றுபவை,
   முட்டையில் இருந்து  தோன்றுபவை,
    தானே  தோன்றுபவை அனைத்தும்
    இறைவனால் படைக்கப்பட்டதால்  வணங்குகிறேன்.

   ஸ்ரீ ராமச்சந்திரரின்   குணங்களை
   வர்ணனை செய்ய விரும்புகிறேன்.
  எனது அறிவு மிகவும்  சிறிது.
   பகவானின் குணமே அதிக  ஆழமானது.
   எனது  மனம்  ஏழை ஆனால் மனோரதம் ராஜா .
   எனக்கு எவ்வழியும் தோன்றவில்லை.

    எனது அறிவு  மிகவும் மட்டமானது.
   எனது  விருப்பம்  மிகவும்  உயர்ந்தது.
   அமிருதம் பெரும்  விருப்பம் .
  உலகுடன்  இணைந்த மோர் கூட இல்லை.
  நல்லவர்களே! என் அதிகப்பிரசங்கித்தனத்தை
  மன்னித்துவிடுங்கள்.
 என்னுடைய  மழலை வர்ணனையை  கேளுங்கள்.

   மழலைச் சொற்களை பெற்றோர்கள்
   மிகவும் ரசிப்பார்கள்.
 ஆனால்  கேட்ட எண்ணமுள்ளவர்கள்,கொடியவர்கள்,
  வஞ்சனைகள் செய்வோர்   மற்றவர்களின்  தவறுகளை
 தங்கள் நகைகளாக அணிவர்.    சிரிப்பார்கள்.

   ரசமோ /ரசமற்றதோ  தன்   கவிதைகள் எல்லோருக்கும் பிடிக்கும்.
மற்றவர்களின்  படைப்புகளைக்கேட்டு படித்து  ரசிப்பவர்கள்
 உத்தமமானவர்கள்  வையகத்தில் குறைவே.


.









.

       

         

No comments: