Sunday, December 4, 2016

துளசிதாசர் --ராமசரிதமானஸ் - --பாலகாண்டம்--2

துளசிதாசர் --ராமசரிதமானஸ் --பாலகாண்டம்--2

   ௧௧.    சித்தர்கள் இறைவனை  கண்களுக்குள் வைத்து,
               சாதகர்களையும், சித்தர்களையும்,
               உயிரோட்டமுள்ள  மலைகளில்,வனங்களில்,பூமிக்குள்
              ஆர்வமாக குதுகூலத்துடன்
            அதிக  சுரங்கங்களைக்  காண்கின்றனர்.

௧௨.     ஸ்ரீ  குரு  சரணங்களின் துகள்கள்
                                                              கண்மைபோல்                
               கண்ணுக்கு  அழகளிப்பவை.  கண்
                தோஷங்களைப் போக்குபவை. அந்த
                குருவின்  பாத தூசியின் கண் மையால்
               கண்கள்  கலந்கமற்றதாகி  -உலகப்
               பற்றுக்களைப்  போக்கும் ஸ்ரீ  ராமரின்
               புகழைப் போற்றுகிறேன்.

௧௩.  அறியாமையால் ஏற்படும்
          அனைத்து ஐயங்களையும் போக்கும்
          பூமிகளின்  தேவர்களான   அந்தணர்களின்
          பாதங்களை   வணங்குகிறேன். -பிறகு
           அனைத்து நற்குணங்களின் சுரங்கமாகத்  திகழும்
           சாதுக்கள் -புனிதர்களை அன்புடன்  அழகிய
           சொற்களால்  வணங்குகிறேன்.
         

௧௪.   சாதுக்களின்   குணங்கள்
         பருத்திப்  பஞ்சு  போன்று ,
           சுபமானது, குணம்  நிறைந்தது.
           அதன்  பழம்  நீரசமானது.  அவ்வாறே
           சாதுக்கள் இதயம்  விஷயப் பற்றில்லாதது.
          பருத்தி போன்று  வெண்மையானது.
          பருத்தி  போன்றே  குணம்  நிறைந்தது.
         பருத்தி  ஊசியால் குத்தப்பட்டாலும்
      .  நூற்று பின்னப்பட்டாலும்
        இன்னல்  சகித்து நன்மை  அளிக்கிறது.
        அவ்வாறே  சாதுக்கள்  துன்பங்கள்  பொறுத்து
        நன்மைகள்  செய்து  உலகில்  வணங்கத்தக்க      
        புகழ்  பெறுகின்றனர்.
        சாதுக்கள்  சமுதாயம்
        ஆனந்தமானது . நன்மை  அளிப்பது.
       அவர்கள்  நடமாடும்  தீர்த்த
       ஸ்தலங்கள் போன்றவர்கள்.
       அங்கு  ராம பக்தி  என்ற  கங்கை நதி  ஒட்டுகிறது.
       இறைவனின் எண்ணங்களின் பிரசாரம்
       அந்த  பக்தி கங்கையில்  ஓடுகிறது.

No comments: