Thursday, November 3, 2016

அவனருள்

காலைவணக்கம் .
என்னையும்
உலகையும்
மற்ற அனைத்து ஜீவராசிகளின்
நல்லவை, அல்லவை,
தீயவை இனியவை , துன்பங்கள்
அனைத்திற்கும்
ஆதி மூலம்
சிவன்.விஷ்ணு பிரம்மா.
ஒரு மனிதனின்
மனதில் தோன்றும்
நல்ல தீய எண்ணங்களுக்கு
காரண கர்த்தர்கள்.
அவர்களுக்கும் சக்திகள் உண்டு.
ஞான சக்தி, இச்சா சக்தி ,க்ரியா சக்தி.
இதை கி.மு.வுக்கு பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே
நமது சாஸ்த்திரங்கள்
ஆலயங்களில் தெய்வ வடிங்களாக
வடித்து வழிகாட்டின.
நாம் நமது உன்னத
ஆன்மீகங்களை
சாத்தான் /சைத்தான்/ மாயை என்று
அனைத்து மதங்கள் கூறும்
வெளி மாயை பின் செல்கிறோம்.
இறைவன் கர்பகிரஹத்தில் உள்ளார்.
ஆனால் ஆலயத்தில்
நுழைந்தால் நம் கண்ணில் படுவது
தூண், கோபுரம்.
அதில்
உலகின் படைப்புகளுக்கான பாடங்கள்.
இதெல்லாம் கடந்து மூலவர்.
நாம் நமது மனத்தை அடக்க
அருள் புரியும் சக்தி.
என்னே . சூட்சுமம்.
புலனடக்கம். இறை உணர்வு,
இறை அச்சம்.
இறை அன்பு.
இறைப்பற்று.
எல்லாமே அவன்.
ஆட்டி வைக்கிறான்.
நாம் ஆடுகிறோம் .
ஒவ்வொருக்கும் ஒருவகை ஆற்றல்.
சிலருக்கு குண்டூசி கையில்
எடுத்தாலே வலிக்கும்.
சிலர் பல மடங்கு எடை தூக்குவார்.
வேக நடை,
அன்ன நடை.
இனிய மொழி,
கர்ண கடூரம்.
தெய்வீகத் தோற்றம்.
ராக்ஷசத் தோற்றம்.
இனியகுரல் .
இனிய பார்வை.
இனிய வார்த்தைகள்.
எப்படித் தான்
மனிதன் தன் முயற்சியால் சாதிப்பான்
என்று நம்புகிறார்களோ
தெரியவில்லை.
சிலருக்குத் தன் மனைவியுடன்
வாழக்கூட முடியவில்லை.
கணவனைக் கவரத் தெரியவில்லை.
தன்
முயற்சி யால் குழந்தை கூட
பெற முடியா நிலை.
அறிவியல் வளர்ச்சி ,
ஆனால் சிலவு .
மருத்துவ விரயம்.
காலவிரயம்
காலன் பயம்.
மேதைகளும்
கோடீஸ்வரர்களும் ,
மாமன்னர்களும் இயலாமல்
இறைவனை சரணடையும் கதைகள்.
நேரம்
கருணாநிதியை கண்ணீர் சிந்த வைக்கிறது.
ஜெயலிதாவை கண்ணீர் சிந்த வைக்கிறது.
இருவரையும் ஒப்பற்ற தலைவர்கள்
என்றொரு கூட்டம்.
அவர்களுக்கும் ௪௦%+௩௦%நிரந்தர எதிர்ப்பு.
கூட்டணி கை கொடுக்கும்..
பெருந்தலைவர் காமராஜருக்குத் தோல்வி.
இந்திராவின் . மரணம்.
ராஜீவின் மரணம்.
அனைத்தும் அறிந்தும்,
தெரிந்தும் .
புரிந்தும் ,
தெளிந்தும்
இறைவனில்லை என்றொரு
ஈவேரா கூட்டம்.
அவரைப்பிரிந்த தி.மு.க,அ.தி.மு.க
இறைவனை வழிபடும் அன்றாட நிகழ்வுகள்
அ.வன் திருவிளையாடல் .
சிந்திப்பீர்.
இறைவன் இருக்கிறான்.
முயற்சியில் வெற்றிக்குப்பின்
அவன் அருள்.
தோல்விக்குப்பின்
அவன் அருள்.
நான் ஆண் என்று நிமிரும்
ஆண்களின் சந்தான பாக்கியத்திற்கும்
அவனருள்.
அறிவு ,ஆற்றல் ,
அறியாமை, திறமையின்மை
நல்ல பெயர்,
கெட்ட பெயர்,
பணம் செல்வாக்கு ,
பதவி அவப்பெயர் ,
புகழ் அனைத்திற்கும்
அவனருள்.
வள்ளுவர் போற்றுவோர்
இறைவனையும் போற்றுவார்கள்.
இல்லை என்றால் வள்ளுவம் சிரிக்கும்.
" தனக்குவமை இல்லாதான் தாள் செர்ந்தர்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. "
ஸ்ரீ கணேசாய நமஹ.
ஸ்ரீ கார்த்திகேயாய நமஹ
ஓம் நமச்சிவாய்
(இதில் சிவனுக்கு முன் ஸ்ரீ இல்லை.
எல்லாமே சுடலைப் பொடியாகும் நிலை. )
ஓம் துர்காயை நமஹ.

No comments: