Saturday, October 29, 2016

இறைவன் இரக்ஷிப்பார்.






காலை வணக்கம் .
கடவுள் எங்கே ?
அவரை நல்லவர்களும் துதிக்கிறார்கள். 
கேட்டவர்களும் அதிகக் கூட்டத்துடன் 
வேள்விகள் செய்து , தங்கமளித்து 
வைரக்கிரீடம் சாத்தி வணங்குகின்றனர். 
புண்ணியாத்துமாவும் வணங்குகிறது . 
பாவாத்மாவும் வணங்கு கிறது. 
இரண்டையும் படைத்தவன் இறைவனே. 
அதற்கு என்ன காரணம் ?

அறியமுடியாது .ஆனால் பார்க்க முடியும்.
சிலர் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தீராத் துயரில்
சிலர் துயரத்தில் மூழ்கி இருப்போதுபோல்
ஆழ்மன மகிழ்ச்சியில்
சிலர் துயரக் கடலில் ஆனந்தமாக.
அனைத்து வசதிகள் அனைத்து சுகம் அனைத்தும் ஆனந்தம் பேரானந்தம் என்ற நிலை உண்டு .
தெரியுமா ? அதை அடைய அறிவு/ ஞானம் பெற்ற மனிதனால் முடியுமா ?
முடிந்தும் முயலாமல் இருப்பது ஏன் என்று தெரியுமா ?
சிலந்திவலையில் சிக்கிய பூச்சியின் 
துள்ளல் கண்டு வருந்திய மனிதன் 
நேராகச் சென்றான் மதுக்கடைக்கு. 
அவனுக்கு குடிக்க ஒரு காரணம். 
மற்றொருவன் வருத்தத்துடன் நிகழ்வைக் கண்டு

நேராக வருத்தம் போக்க மாதுவைத் தேடிச்சென்றான்.
மூன்றாமவன் நேராக கசா ப்புக்கடைக்குச் சென்று
ஆடு,கோழி,மீன் என வாங்கிச்சென்று
இல்லாளிடம் பக்குவமாகச் சமைக்கச் சொல்லி
வயிறார ருசியாக உண்டு மகிழ்ந்தான்.
பூச்சி? கண்டதும் துயரம் மீள மாயை வலிகள்.வழிகள்.
பேரானந்தம் அடைந்தவர்கள்
வெளி உலகைத் துறந்தனர்.
இன்னல் நிறைந்த அழியும் உலகம்.
இந்த படைப்பின் ரகசியம் புரியாது.
புரிய சித்தார்த்தர் போன்று 
உலகியல் துறந்து சென்றவர்களும் உண்டு. 
வள்ளுவர் போல் இல்லறத்துறவிகளும் உண்டு. 
ரமண மகர்ஷி போல் அருள் பெற்று ஆண்டவன்

அழைப்பேற்று மகிழ்வுடன் பேரானந்தத்தில்
மூழ்கி தெய்வீக குரு ஆனவர்களும் உண்டு.
அருணகிரிநாதர் நாதர் போன்ற பாவிகள்
ரக்ஷிக்கப்பெற்று புகழ்பெற்ற நிகழ்வுகளும் உண்டு. 
அசோகர் கொடு ங்கோலன் என்ற நிலை மாறி

நன்மைகள் பலபுரிந்த நன்மன்னன் ,பேரரசர்
ஆனதும் உண்டு. 
இந்த ஆண்டவன் அருள் பெற

ஒரே வழி உண்டு.
நாம் நம் கடமையை மட்டும் நேர்மையாக ,
ஊழலின்றி கையூட்டு இன்றி
செய்தால் போதும்.
பேரானந்தம் கிட்டும் .
மாயை நிறைந்த உலகில் எத்தனை பேர் 
இந்த மாயை , சாத்தான் ,சைத்தானில் இருந்து 
தப்பிச் செல்வர் ?
ஜனனம் --மரணம் உறுதி .
நம்முடன் எதுவும் வராது. 
இறந்தால் நாம் பிணம். 
அதைக்காட்டி நெருப்பு வை, புதை என்பதே 
இறுதி .

நல்லதே செய்யுங்கள்! நல்லதை விரும்புங்கள்!
நன்மை செய்யக்கூட பிறரிடம் கேட்காதீர்கள் .

நல்லவை நடந்தே தீரும் .
இருக்கின்ற ஆலயங்களைக் காப்பாற்றுங்கள்.
ஆலய நன்கொடை புதிய ஆலயங்கள்
இறைவனருளால் உருவாகிவிடும்.
பட்டினி கிடந்தது மெய் வருத்தி தியானம் வேண்டாம். 
தியானத்தில் மூழ்கினால் , பசி இருக்காது. 
ஆசையிருக்காது. 
ஞானமும் பேரானந்தமும் கிட்டும். 
இறைவன் /பகவான் / ஆண்டவன் இரட்சிப்பார்.

No comments: