Saturday, October 29, 2016

சிந்திக்குமா ? சனாதன மதம்


சனாதன தர்மம்


மகிழ்வா ? இன்னலா? இனியவையா ?
எளிமையா ? பாரதத்தில் மட்டுமே புத்தம் சமணம் சீக்கியம் . துவைதம் அத்வைதம் விஷிஷ்டாத்வைதம்
சிவ உபாசனை , சக்தி உபாசனை , விஷ்ணு ,ராமர் , கிருஷ்ணர் உபாசனைகள்,
பலவித ஆஷ்ரமங்கள் , சம்பிரதாயங்கள்
ஏன்?
விவாதிப்போமா ? மக்கள் புரிய !தெளிய ! அறிய !பின்தொடர ! மனம் மாறி தாய் மதம் வர.
அதைவிடுத்து பலகோடி ரூபாய்கள் அழகு விநாயகர் சிலைகள் கடலில் எரிந்து அவமானப்படுத்துவது
அந்த கோடி ரூபாய்களில் எவ்வளவு நாட்டிற்கு ,
ஏழைகளுக்கு உதவலாம்.
ஆலயங்கள் முன் பிச்சைக்காரக் கூட்டம் ,
ஏன் குறைவதில்லை.
தண்டச்சோறு போட்டு ஒரு பெரும் கூட்டத்தையே ஏன் வளர்க்கிறோம் ?
எத்தனை சமுதாயத் திருடர்கள் , ஏமாற்றுக்காரர்கள் இந்த ஆலயங்களில்.
ஆலயம் செல்வது மன சஞ்சலங்கள் தீர்க்க.
ஆலயம் செல்வது மன அமைதிக்காக .
ஆலயம் செல்வது மன நிறைவுக்காக,
ஆனால் அங்கு ஒலிபெருக்கிகள் அலறுகின்றன --
திருடர்கள் ஜாக்கிரதை .
மணிபர்ஸ் ஜாக்கிரதை.
யாரையும் நம்பி ஏமாறவேண்டாம்.
எளிய தரிசனம் ,குறுக்கு வழி தரிசனம்,
கட்டண தரிசனம் நீங்களே டிக்கட் பெற்று செல்லவும்.
நடுவில் அர்ச்சனைக் கூடை கேட்பார்கள் .
ஏமாறாதீர்கள்.
சற்றே சிந்தியுங்கள்.
ஆலயங்களில் மன அமைதி மன ஒருமைப்பாடு கிட்டுமா ?
இறைவனின் சிந்தனைகள் அதிகரிக்குமா ?
திருடர்கள் / ஏமாற்றுக்காரர்கள் அச்சம் அதிகரிக்குமா ?
ஆசைகள் அதிகமாகுமா ?
மாயைகள் ஆலயம் சுற்றியுள்ள வணிகவளாகண்களால்
ஆடம்பரங்காளால்
கறுப்புப்பணம் வைரக்கிரீடங் களால்
மாயை / சைத்தான் /ஊழல்கள் அதிகரிக்குமா ?
இறைபயம் நேர்மை அதிகரிக்குமா !
சினேகா செருப்புபோட்டதற்கு
கொடும்பாவி எதிர்த்த கூட்டம்,
அரைக்கால் டவுசர் கோவணம்கட்டி சாதுக்கள் வாழும்
நாட்டில் எதிர்க்கும் கூட்டம் ,
விநாயகரை ஐம்பதயிரன் சிலவில் கடலில் எரியும் கூட்டம்
சிந்திக்குமா?
அடாவடி வசூலை அதிகாரிகள் ஆன்மீகவாதிகள்
தடுப்பார்களா?
பக்தி என்ற பெயரில் சுரண்டும் கூட்டம்
இறைவனே ஆதரிக்காது.

No comments: