Thursday, October 27, 2016

அவனின்றி அவனியில் வாழ்வதரிது

அவனின்றி  அவனியில்  வாழ்வதரிது.

அவன் புகழே  அவனியில் சாஸ்வதம் .
ஆஸ்திகள் பல கோடி .

வசதிகள் இல்லாததில்லை.

மருத்துவர் கூட்டம் .
இருபெரும் தலைவர்கள் .
அன்புள்ளம் கொண்ட தொண்டர்கள்
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரார்த்தனை.
ஆஸ்திகப் பேரரசர் திமுருகத் தொண்டர்

ஆன்மீக ஞானி தமிழ் வடமொழி மேதை

திருமுருக கிருபானந்தவாரியை
விதியின் வலிமை அமேரிக்கா சென்றாலும் விடாது என்றதற்குத் துரத்தி அடித்த கும்பல்
மண் சோறு சாப்பிடுகிறது.
காவடி எடுக்கிறது.
கண்ணீர் மல்கி பிரார்த்திக்கிறது.
என்ன செய்வது ?
இறைவனை வேண்டும் .
இறைவனின் பலத்திற்கு முன் லௌகீக பலம்

வீண் .

எல்லாம் வல்ல இறைவனின் ஆற்றல் , திறன்

மக்கள்
அறியவே மூப்பு , நோய் , மரணம்.

இறைவா ! போற்றி.
பக்தர்களுக்கு அருள்வாய் போற்றி.
தி.க உன்னை அவமதித்த கூட்டத்தை கலங்கவைக்கும்
உன் வல்லமை போற்றி.

கோடிகள் சேர்த்தாலும் . துணைவியர்கள் சேர்த்தாலும்
தொண்டர்கள் சேர்த்தாலும் பதவிகள் பல வகித்தாலும் உன்னருளின்றி வாழ்வதரிது.
இறைவா! காப்பாற்று!
உன்னடி சரணம்.
உன்னைப்போற்றுவோரும் உன்னடி சரணம் .

உன்னைத் தூற்றியோரும்
தூற்றுவோரும்
உன்னடி சரணம் !
வீரமணிகண்டா! ஐயப்பா! உன்னைத் தூற்றியோரும்

உன் முன் இருகரம் இணைத்து வணங்கும் காலம்.

ராமா! கிருஷ்ணா ! சிவா! முருகா ! கணேசா !

உன்னடி சரணம்.

பல பங்களாக்கள் , அரண்மனைகள் காலப்போக்கில் இல்லை .
உன் புகழ்பாடும் வேதங்கள் , குரான் , பைபிள் , குரு கிரந்த சாஹப் என்றும் மன நிறைவு. மன அமைதி . ஓம் சாந்தி! ஓம் சாந்தி ! ஓம் ! ஓம்!







ஓம் ! இதுவே சத்தியம்.
உன்னடி சரணம்.

No comments: