Saturday, October 22, 2016

ராமசரிதமானஸ் --சுந்தரகாண்டம் ப--நான்கு

         ஹனுமான்      விபீஷணனை  ராம் நாமத்தை

      ஜபிப்பதைப்பார்த்து   மகிழ்ந்தார்.

 ஹனுமான்  அவரை  உத்தமர்  என்பதறிந்து  மகிழ்ந்தார்.

ஹனுமான்   இவரிடம் என்னை

 அறிமுகப் படுத்திக்கொண்டால்

எந்த தீங்கும்  வராது.

நன்மையே  பயக்கும்  என்று எண்ணினார்.


     அந்தணன் வடிவில் ஹனுமான்  ஜீ  அவரை  அழைத்தார்.

அழைப்பைகேட்டு  விபீஷன்  அங்குவந்தார்.

  ஹனுமானை  வணங்கினார்.

நலம் விசாரித்து  ,  வந்த  காரணம்  கேட்டார்.


  மேலும்  நீங்கள்   ஹரி  பக்தரா ?

 உங்களைப்பார்த்து  என் மனதில்

 அன்பு  பொங்குகிறது.

 நீங்கள்  ராமர்தானோ ?

என்னிடமே  வந்து  அருள்  பாலிக்க  வந்தீரா ?

வீட்டிலேயே காட்சி  அளித்து ,

 அதிக  பாக்யசாலி ஆக்க  எழுந்தருளி நீ ரா?

  ஹனுமான் ராமரின் முழு   கதையும்  கூறினார்.

கேட்டதும் இருவரும்  மிகுந்த  ஆனந்தமடைந்தனர்.

ஸ்ரீ  ராமரின் பண்புகளை நினைத்து

இருவரும்  அன்பிலும்  ஆனந்தத்திலும்

மூழ்கினர்.

விபீஷணர்  ஹனுமானிடம் சொன்னார் --

வாயு  புத்திரரே!   நான் இங்கு இருபல்லுக்கு

 நடுவில்  இருக்கும்  நாக்கு போல்   இருக்கிறேன்.

என்னை   அநாதை  என்றறிந்து சூரிய குல  நாதர் கிருபை காட்டுவாரா ?

நான்  அரக்க உடலில்   பிறந்ததால்  எதையும்  சாதிக்க  முடியவில்லை.

மனதில்  ராமர்  மேல்  அன்பும்  இல்லை.

ஆனால்  உங்களை  சந்தித்தது  ராமனருளால்  தான்.

  உங்களைப்பார்த்ததால்  ராமனருள்  எனக்கு  உள்ளது

என்ற  நம்பிக்கை  வந்துவிட்டது.

அவர்  அருள் இன்றி  உங்கள்  சந்திப்பு    கிடைத்திருக்காது.


ராமரின்  அருளால் தான்  தாங்களாகவே வந்து அருளியிருக்கிரீர்கள்.


அப்பொழுது  அனுமன்  சொன்னார் --

அவர் தன தொண்டர்  மீது எப்பொழுதும்   அன்பு  செலுத்துவார்.



நீங்களே  கூறுங்கள் ,

 நான் என்ன  உயர்  குலத்தவனா ?

சஞ்சல  முள்ள  வானர இனத்தைச் சேர்ந்தவன்.

 அனைத்து விதத்திலும்  தாழ்ந்தவன்.

காலையில் குரங்குகளின் பெயர் சொன்னால்  சாப்பாடே  கிடைக்காது.

தோழரே ! நான்  தாழ்ந்தவன்.

 ஆனால்  என்னை ராமர்   அருள்பாளித்துள்ளார்.

ராமரின்  குணங்களை  நினைத்து கண்ணீர் வடிக்க  ஆரம்பித்தார்.

  இவரின்  குணங்கள்  அறிந்தும்  பண்புகள்  அறிந்தும் ,

உலகியலில்  ஈடுபட்டு  அவரை  மறந்தால்

 துன்பம் வரத்தானே  செய்யும்.

இவ்வாறு  ராமரின்  பெருமைகளைக்கூறி

சொல்லமுடியா பேரானந்தத்தைப்  பெற்றார்.











 

No comments: