நாளுக்கு நாள் நடைபெறும் நிகழ்வுகள்,
நான்மறையில் எழுதிய உண்மைகள்.
யுகங்கள் மாறுகின்றன, நிகழ்வுகளில் வடிவங்கள் மாறுகின்றன,
அனைத்து யுகங்களிலும் யாருமே நிம்மதியாக இல்லை.
ஆனால் ஆட்சி , புகழ், அசுர அராஜகங்கள் இல்லா யுகம் இல்லை.
ராமர் வாழ்ந்த காலத்திலும் கடத்தல்,
தெய்வக்குழந்தைகள் வளர்த்த தசரதருக்கும் ,
அவரது ராணிகள் கைகேயி , கௌசல்யா , சுமித்திரை மூவரின்
கண்ணீர்க்கதைகள்.
குந்தியின் மனதில் நிம்மதியா ?
கண்ணனின் வாழ்வில் நிம்மதியா ?
யுகங்கள் மாறுகின்றன . காட்சிகள் மாறுகின்றன.
அறிவியல் கண்டுபிடிப்புகள் மாறுகின்றன.
ஆனால் மனிதர்கள் வாழ்வில் நிம்மதி இல்லை.
உண்மையே பேசிய ஹரிஷ்ச்சந்திரன் ,
பொய்யாகவே வாழ்ந்த இந்திரன் ,
அரக்கர்களின் அட்டூழியம் .
இன்றைய காட்சிகளிலும் ஆள்பவருக்கு மூன்று துணைவியார்,
ஆள்பவர்களுக்கு செல்வி ,
யுகங்கள் , நிகழ்வுகள் புதிய தோற்றப் பொழிவோடு.
ஜானகி ராமச்சந்திரன் , மாற்றான் துணையோடு,
அன்று ராவணன் சீதை கடத்தல்,
இன்றைய ஜானகி ஆட்சிபீடம் .
நிம்மதி எங்கே ? அமைதி எங்கே?
யுகங்கள் மாறினாலும் காட்சிகள் புதிய கோலத்தோடு.
இதுவே அன்பு உலகம். ஆண்டவன் ஏற்பாடு.
அன்று சீதை , ஆண்டாள் , கபீர் அனாதையாக.
இன்று பல தொட்டில் குழந்தைகள்,
கடத்தி தூங்கவைத்து பிச்சைஎடுக்கும் கும்பல்.
நாற்சந்தி யில் சிறுவர் பிச்சை .
ஆலயங்களில் இறைவன் வேடத்தில் பிச்சை.
ஆண்டவனையே பிச்சை எடுக்கவைக்கும் பூலோக வாசிகள்.
எல்லாமே அவன் செயல்.
No comments:
Post a Comment