Friday, October 21, 2016

ராமசரிதமானஸ் --சுந்தரகாண்டம் --2,௩, ௪, ௫, ப.1

       ஸ்ரீ  ரகுநாதரே !

      என்  மனதில்  எவ்வித   மற்றொரு   விருப்பமும் இல்லை ,

     நான்  சத்தியமாக  கூறுகிறேன்.

    நீங்கள்  அனைத்தும்  அறியும் அந்தராத்மா !

   நீங்கள்   ரகு  குலத்தில்  மேன்மையானவர்.

   உங்கள்மீது எனக்கு  பூர்ண  பக்தி(இறையன்பு)

      அளித்து   எனது  மனதை    காமம் (பெண் ஆசை )முதலிய

     குற்றங்கள் தவறுகள் (தோஷங்கள் ) இல்லாமல்    செய்யுங்கள்.


       ஈடில்லா ஒப்பீடு  இல்லா  பலம்  பொருந்தியவரே !

         தங்க  மலை போன்ற ஒளிமிக்க உடல் உடையவரே!

          அரக்கர்கள்  என்ற  வனத்தை அளிக்கும்  அக்னி உருவமே !

          ஞானமுள்ளவர்களில்  மூத்தோனே, நாதரே,

         சகல  குணங்களின்  இருப்பிடமே !

        வானரங்களின்  சுவாமி  ரகுநாதரின்  அன்புக்குரியவரே!

         வாயு புத்திரரான ஹனுமான்  அவர்களே !

         நான்  உங்களை  வணங்குகிறேன்.

***********************************************************************************

   ௪.    ஜாம்பவானின்  சொற்களைக்   கேட்டு

      ஹனுமான்ஜீக்கு மனதில் மிகவும்  பிடித்துவிட்டது.

    அவர்  ஜாம்பவானிடம்  சொன்னார் --சகோதரா!

      நீங்கள்  இன்னல்  பொறுத்துக்கொண்டு காட்டில்
   
    பழங்கள் கிழங்குகள்  சாப்பிட்டு

   நான்  சீதையைப் பார்த்து வரும்  வரை

   எனக்காக  காத்திருங்கள்.

   எனது  பணி கட்டாயம் முடிந்துவிடும்.

 எனது  மனதில்  மிக மகிழ்ச்சி  பொங்குகிறது .

  இவ்வாறு  கூறிய  ஹனுமான் ஜீ,

  மிக  மகிழ்ச்சியுடன்  அனைவரையும்  வணங்கிவிட்டு

 மனதில் ராமரை   தியானித்துக்கொண்டே  புறப்பட்டார்.



    சமுத்திரக் கரையில்  ஒரு  அழகான  மலை   இருந்தது.

   அதன் மீது விளையாட்டாக சர்வ  சாதாரணமாக  ஏறி

   அடிக்கடி ரகுநாதர ரை    நினைத்துக்கொண்டே

  மலை மேலிருந்து  மிக வேகமாக குதித்தார் ,

   ஹனுமான்  மலையிலிருந்து  குதித்ததுமே

 அந்த  மலை பாதாளத்துக்குள்  அமுங்கிவிட்டது.

 ஸ்ரீ ராமச்சந்திர  மூர்த்தியின்   குறிதவறா  அம்பு  போல் ,

 ஹனுமான்  ஜீ  புறப்பட்டார்.

 சமுத்திரமானது   மைனாக்  மலையிடம்  கூறியது --

 நீ  இவரை   உன்மீது  இளைப்பாற  விடு.

 இவரின்   களைப்பை  போக்கிவிடு.



 ஹனுமான்   அதை   கையால்  தொட்டு வணங்கிவிட்டு  சொன்னார் --

  ஸ்ரீ  ராமரின்   வேலையை  செய்து  முடிக்காமல்  எனக்கு   ஓய்வு  கிடையாது. .




 

           




 

   

No comments: