Monday, May 2, 2016

இறைச் சிந்தனைகள்

தனிப்பட்ட   மனிதன் கெட்டுவிட்டானா ?

சமுதாயம்  கெட்டுவிட்டதா.?

இறைவன் கெடுத்துவிட்டானா .?

தனிமனிதனின் பேராசை

மனித இனத்தைப் பிரிக்கறதா ?

அப்படி  எனில் இத்தனை மொழிகள்

தனி மனிதனா உருவாக்கினான்?

மனிதர்களில் தான் எத்தனை உருவவேறுபாடு.

சிந்தனைகளில் வேறுபாடு.

குரல் வேறு பாடு. ரேகை வேறுபாடு.

வேற்றுமைகள்  தனிமனிதனால் வந்ததா ?

சமுதாயத்தால் வந்ததா?





இறைவனால் வந்ததா ?

இறைவழிபாடுகளில் எத்தனை

வேற்றுமை. இறைவழிபாடற்ற சமுதாயமும் உள்ளதே.

அத்வைதம் த்வைத்  உருவம் உருவமற்ற

எத்தனை  .இரக்கமற்ற மனிதன்
இரக்கமில்லா மனிதன்
ஆசையற்ற மனிதன் பேராசை உள்ள மனிதன்

அறிவுள்ள மனிதன் ஆற்றலுள்ள மனிதன்

பைத்தியக்கார மனிதன் செவிட்டு மனிதன குருட்டு மனிதன்

மரியாதைக்குறிய மனிதன் அவமானப்படும் மனிதன்

வாய்மைக்காக  நாட்டிற்காக சமுதாயத்திற்காக
வையகத்திற்காக என மனித சேவை வேறுபாடுகள்
தனக்காக தனிமனிதனுக்காக வாழ்பவன்
இறைவனின் லீலைகள்

இயற்கையின் பாடங்கள்
யாரறிவார் ?

ஒவ்வொரு மனிதனினையும் ஆட்டிப்படைக்கும் ஆண்டவன் .

சும்மா இருக்கவைப்பவனும் அவனே. செயல்படவைப்பவனும் அவனே.







No comments: