Tuesday, March 29, 2016

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது

எனக்கு காலை நேரம் காலை வணக்கம் .
மாலை நேரம் மாலைவணக்கம்.
   வயைகத்தில் வாழ்வது ஒரு கலை.
    அதில் அனைவரும் அனைவருக்கும் நல்லவர்கள் ஆக முடியாது.
பெரும்பான்மை யானவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றால்  அன்பான புன்முறுவலுடன்  கூடிய
நடவடிக்கை.அன்பு பண்பு மரியாதை என்பது பதவியில் இருந்தால் அந்த அதிகார நன்மைக்காக பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும்  கிடைக்கும்.
நண்பர்கள்  நண்பர்களாக இருக்க அதொருகலை.
பணம்  பணம் அதை உதவினால்  ஒருமரியாைதை.
நல்லமனிதன் கேட்கும் பொழுதெல்லாம் உதவுவான் .
நல்ல நேர்மையான சத்தியமான மனிதர்கள்  என்றால்
உதவவேண்டும். உதவும் ஆற்றல் உள்ள பணம் குணம் வேண்டும்.
பணம் சம்பாதிப்பது  என்றால் அதற்கு   ஆண்டவன் அருளா ? திறமையா .? முயற்சியா ?  அறிவா ?தந்திரமா ?
பரம்பரையா ?  சிறந்த வியாபாரி பார்த்து ஒருவன் வாணிகத்தில் முன்னேற முடியவில்லை.
பாடனைப்பார்த்து  பாடகனாக முடியவில்லை
தலைவனைப்பார்த்து தலைவனாக முடியவில்லை.
கலைஞனைப்பார்த்து கலைஞனாக முடியவில்லை.
    காரணம் நம்மை ஆட்டிவைக்கும் இயக்கும்
இயக்குனர் ஆண்டவன். அவன்  விரும்பினால் அவன் அருள் பார்வை கிடத்தாலன்றி நமக்கு ஒருஉயர் அந்தஸ்து வராது. அவர்களைப் பின்பற்ற வேண்டும் .ஒருவரை நாம் சந்தித்தால் அவர் உதவி பெறக்கூட ஆண்டவன் இயக்கவேண்டும் .
எனவே அவன் அருள் பெற அவனை இதயத்தில் வைற்று போற்றுங்கள் .எண்ணங்கள் நிறைவேறும் ஏற்றமடையும் .
வாழ்க! அனைவருக்கும் அவன் அருள் உண்டு.

No comments: