Friday, December 11, 2015

praise nature

இயற்கை மிக சக்தி வாய்ந்தது .

இயற்கையின் வளம் மகிழ்ச்சி தரக்கூடியது.

இயற்கையைப்  பேண, 
இயற்கையையே தெய்வமாக வழிபட்ட முன்னோர்கள்.
ஆனால் ,நகரம் என்ற செயற்கை  ஆடம்பரம் 
ஆஸ்தி தந்தது. பொழுதுபோக்கு அம்சங்கள் தந்தது.

பெரும் மால்கள் தந்தது. பணம் .பணம்.பணம்.

கடன் தர வங்கிகள்,கடன் வாங்கித்தர தரகர்கள் ,
கடன் வாங்கத்தூண்ட முகவர்கள் ,
 பார்த்ததெல்லாம் வாங்கிக்குவித்த  மக்கள் , இன்று 
மாரி  வெள்ளத்தால் பரிதாப நஷ்டத்தில் 
சிந்திக்கவேண்டும் தவணை முறையில் வாங்கிய 
மரத்தூள் அழுத்திய மரக்காட்டில் அழகுதான் ;ஆ னால் 
மழை  தண்ணீர் ஊறியதால் தூள்;தூள் ;
தெய்வப்படங்கள் இன்று தெரு குப்பைத்தொட்டியில் 
இயற்கை சீற்றத்தால் இயல்பான வாழ்க்கை பாதிப்பு.
மதங்கள் மறந்த நட்பு ,
மனம் நிறைந்த களங்கமில்லா அன்பு.
இறைவனின் லீலையால் ஒன்று சேர்ந்த சரித்திரம்.
இறைவனை வணங்குவோம் ;இயற்கையைப் போற்றுவோம்.






No comments: