Wednesday, December 9, 2015

murugaa உன்னருள் வேண்டும் தருவாயாக!

மலை மேல் இருக்கும்  கிரிவாசா!

மலைமகள்  மைந்தா !

கயிலை மலை சிவகுமாரா !

கஜமுகத்தோன்  தம்பியே !


மயில்வாஹனா ! மாயோன் மருகா !

பழனிமலை  தெய்வமே !பாலகுமாரா !

பரமேஸ்வரன் குமாரா !பார்வதி புத்ரா !

பக்த ரக்ஷகா !பக்த வத்சலா!

உன்னை யே சரணடைகிறேன் .
உன்   அருள் வேண்டுகின்றேன் .
என்னை நீ காத்தருள்வாய் !
உன்னருளால்  வாழ்கின்றேன் !
உன்  நாமம்  ஜபிக்கின்றேன் .
முருகா !கந்தா!கதிர்வேலா !
ஆறுமுகா !ஆறுதல் தருவாய் !
தணிகைவேல்  முருகா !
துணிவினைத் தருவாய் !
தரணியில் வாழ  தனம் வேண்டேன் .
உன்னருள் வேண்டும் தருவாயாக!

No comments: