Wednesday, December 16, 2015

இறைவன்

  உலகப்பொதுமறை திருக்குறளில்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

இறைவனை நினைக்க வேண்டும்.
இறைவனை வணங்கவேண்டும்
இறைவனைப் போற்றவேண்டும்.
ஏன். ?
வையகம் வாழ்கிறது.ஆனால்இது நிலையற்றது.
நிலையான வையகம் இல்லை.
அகத்தில் இறைவனை வை.
வையகத்தில் இருக்கும் நாட்கள் இன்பமயமாகும்.
அகவாழ்கை ஆனந்தமாக இருக்கவேண்டும்.
புற வாழ்க்கை ஆடம்பரமாக
பலர் போற்றும் படியாக இருந்தாலும்
தனியாக அமர்ந்து தன்னைப்பற்றி
நினைக்கும் பொழுது ஒரு மன நிறைவு வேண்டும்.
மனமகிழச்சிவேண்டும்.
மன அமைதிவேண்டும்.
அந்த உயரிய நிலைக்கு
வர வேண்டும் என்றால்இறைவனை
வேண்டுதல்வேண்டாமை இல்லாதவனை இறைவனை வணங்க வேண்டும்.
ஆன்மீகம் என்பது அலௌகீகம்.
இதில் நாம் சஞ்சலமற்று ஈடுபடவேண்டும்.

No comments: