Friday, November 27, 2015

அன்பு பக்தி மனிதநேய மறுப்பு.

மதங்கள் அன்பு வளர்க்க
மனிதஒற்றுமை ஓங்க
மனிதநேயம் வளர்க்க
தானதர்மம் வளர்க்க
தியாகமயமான
பற்ற்ற வாழ்க்கை வாழ
அழியும் உடல் ஆஸ்தி சேர்ப்பது
ஆனந்தமாக சுயநலத்துடன்
அவனியில் இருக்க அல்ல
எளிய வாழ்க்கை உயர்ந்த எண்ணத்துடன் வாழவே.ஆனால்
இன்று
ஆண்டவன் பெயரால்
மனித ஒற்றுமை  மறுக்கும் காட்சி
அல்லா பெரிதன்று ஒருகூட்டம்
பதினைந்து நிமிடத்தில்
இந்துக்களை ஒழிக்க போது ம்
என்கிறது.
பச்சிளம் பள்ளி சிறார்கள்
அல்லாவின் குழந்தைகள்
பாக்கில் கொன்ற பாவிகள்
கல்மனதையும் களங்க வைத்தது
சனாதன தர்மமோ ஜாதிவெறியால்
மனிதர்களை உயர்ந்த தாழ்ந்த என்று ஏளனம்செய்கிறது.
கிறிஸ்தவம் அன்பு சேவை
கல்வி தொண்டு என தலித்துகளை
மதம்மாற்றி மரியாதை செய்கிறது.
வளர்ந்தவர்கள் உயர்ந்த ஜாதி
ஹிந்துக்களை விஷ ஜந்துக்களாகப்
பார்த்து பயங்கரவாத இஸ்லாமியர்களை அடக்க முயற்சிக்கிறது.
மதங்கள் சுயநல அரசியல்
மதத் தலைவர்களால்
மனித ஒற்றுமையை கூறு போட்டு
பயங்கரவாதத்தைத் தூண்டுகிறது.



No comments: