Sunday, October 11, 2015

அதுவே அவனியின் நிலையாமை போக்கும்.

அமர்ந்து அமர்ந்து நாம ஜபம் செய்தால்
அகம் குளிர ஆண்டவனின் கருணையாலே 
ஜகத்தினில் ஜயமுண்டு ;தோல்வி இல்லை.

இறையின்பம் வேறு ;அவனியின் ஆடம்பரம் வேறு ;

மன    அ மைதி காண  மகேசன் அருள் வேண்டும் .
மன ஈடுபாட்டுடன் பக்திவேண்டும். ஆனால் 

அலைபாயும் மனது,அவனிடத்தில் லயிப்பது கடினம்.

தியானம் யோகா என்றே அறிவுரை வழங்கினாலும் 

ஜபம் நாம ஜபம் என்றே ஆர்ப்பரித்தாலும்
அவனது கருணையே ஆனந்தம் பயக்கும்.
அதுவே அவனியின் நிலையாமை போக்கும்.










No comments: