Monday, October 12, 2015

ஏற்றம் தாருமையா .

ஷண்முகனே! சக்தி வேலவனே !

ஞானவேல் !வெற்றிவேல் !

கந்தவேல் !கடம்பவன வேலவா !
கலியுக நாயகா! கஷ்டங்கள் போக்கவா !
தெள்ளிய தமிழ்  அறிவால்
திருமுரு காற்றுப்படை  எழத வைத்தாய்
திருப்புகழ்  அம்ர்தம்  அளித்து
அருணகிரியை ஆட்கொண்டாய்

அறுபடை வீடுகளில் அற்புதம் படைத்தாய்

சூரனை  வென்றாய் சேவல் கொடியோனாய்

சூரனுக்கு அபயம் அளித்தாய்
மயில் வாகனனாய்  பாம்பன் சுவாமிகளை
ஷண்முகக் கவசம் பாடவைத்தாய் .

எனக்கு உன் அருளால் ஏற்றம் தாருமையா .


No comments: