Sunday, August 2, 2015

அடியார்கள் விரும்பும் தொண்டு.

அனந்த  ஆனந்தம்  பிரம்மானந்தம்
மெய் ஞான உணர்வு ,
மெய் பொய்என்ற  உணர்வு
நிலையாமை  என்ற உணர்வு
நிலைத்துவிட்டால்
மனம் நிலைத்து  அவனிடம் ஐக்கிய மாகிவிட்டால்
உலக ஆசைகள் துறந்துவிட்டால்

பிரம்மானந்த  உணர்வு பிற ஆனந்தங்களை
புறந்தள்ளி  அக ஆனந்தமளிக்கும்

அதுவே பிரம்மானந்தம்.

வையக வாழ்வின்  அமைதி அலை எங்கே ?

ஞானம் பெற்றோர் ஞாலம் உய்ய தொண்டுள்ளம்

படைத்தோரை   தான தர்மம் என்றே தூண்டினர் ;

தனக்கென ஸ்வர்ண பீடம் அமைக்கவில்லை .

உள்ளார்ந்த அன்பர்கள் நேரடி தொண்டே

அடியார்கள் விரும்பும் தொண்டு.


No comments: