Sunday, May 24, 2015

அன்பு அழுதுவடியும்.

அன்பு போதும் என்றார் 
பசிவந்திடப்பணம் வேண்டும் 
அன்பு பசி தீர்க்காது.
மானம் காக்கத் துணி வேண்டும் .
துணிவாங்க அன்பு போதாது 
பணம் வேண்டும்.
இருக்க வீடு வேண்டும் .
குடி இருக்க அன்பு போதாது 
வாடகை தர பணம் வேண்டும்.

காதலே பெரிது என்று 
கண்ணீர் மல்கி 
கசிந்துருகி 
இருந்தோர் 
பரதேசிகள்.
போர் செய்து 
பலரை பலியிட்டு 
பலரை கொன்று 
ஆட்சி பிடித்தோர் 
ஆட்சியாளர் .
அரசன்.
அன்பு எங்கே /
எப்பொழுதும் அடிமைதான் .
பணம் கோலோச்சும்.
அன்பு  அழுதுவடியும்.

No comments: