Monday, May 25, 2015

நாம் விரும்பும் சக்தி பெறுவோம்.

 விநாயகர்  விரும்பும் நாயகர் 
விக்னங்கள் தீர்க்கும் 

விக்னவினாயகர் 

வினைகள் தீர்க்கும் 

வினைதீர்க்கும் விநாயகர் 
சித்தி தரும் சித்தி விநாயகர் 

முக்தி தரும் முக்குருணி விநாயகர் ,
மன மகிழ்ச்சி தரும் 
மணக்குள விநாயகர் ,
கலக்கம் தீர்க்கும் 
கற்பக  விநாயகர் .
அனைத்து ஆண்டவர்களுக்கும் 
ஆரம்ப பூஜை ஆதிமுதல் 
யானை முகத்தோனுக்கே .

அவன் பாதம் தொழுதே 
காவியங்கள் துவங்கும்.
பிடித்துவைத்த 
மஞ்சள் பிள்ளையார் 
பிடித்தமுடன் பூஜை 
புஷ்பார்ச்சனை 
பாதவிநாயகர்  தரிசனம் பின்னரே 
பழனி ஆண்டவன் தரிசனம்.
ஆற்றங்கரை ,குளக்கரை விநாயகர் 
ஆங்காங்கே அரசமர பிள்ளையார்.
த்வபிகர்ணம் தோப்புக்கரணம் 
ஞானம் நினைவாற்றல் தரும் -அந்த 
ஞான விநாயகனை 
நாளும் தொழுவோம் 
நாடித் தொழுவோம் 
நாம் விரும்பும் சக்தி பெறுவோம்.



No comments: