Sunday, April 19, 2015

அவனை அறிந்தவர்கள் மாணிக்கமே .

ஆண்டவனின்  அதிசய ரஹஸ்ய  படைப்பு ,

யாரே  அறிவர் ?

காட்டுப் பூ போல் கர்ணனைப் படைத்தார் .

பூக்கள் அரசவையில்  மட்டும்  பூப்பதில்லை

நகரத்தை விட்டு தொலைவில்  காட்டிலும் பூக்கின்றன .

இந்த கடும் இயற்கையின் மந்தணம் யார் அறிவர் ?

காட்டில் மலர்ந்தாலும் அப் பூ மணத்தால் ,அழகு தோற்றத்தால்

குணத்தால் ,காணும் மக்களின் உளம் கவர்கின்றன .

பங்களாக்களின் அழகுப்பூக்கள்  தென் படுகின்றன.

காட்டுப்பூக்களின்  சக்தி  தானாக வெளிப்பட்டு

மதிப்பைப்  பெருகின்றன.

பிறந்த இடம் அரண்மனையானாலும்  திறமை இன்றி

பெருமை யாரும் அடைவதில்லை.

சேற்றில்  மலர்ந்த செந்தாமரை போல்,

குப்பையில் கிடக்கும் மாணிக்கம் போல்

குணத்தால்  பண்பால் உயர்வோர் பலர் .

ஆண்டவனின்  இயற்கை அதிசயங்கள் ,கடும் மந்தணங்கள்.

அவனை அறிந்தவர்கள்  மாணிக்கமே .

No comments: