Thursday, April 30, 2015

வெறுப்பில் வேதனை தானே மிஞ்சும்

 ஆன்மிகம் என்றால்  தியாகம்  வேண்டும் .

ஆடம்பரம்  அறத்திற்கு மறத்திற்கு  வேண்டுமா?

ஆண்டவனைக் கண்டோர் ,ஆண்டவன் செய்தி சொன்னோர் 

ஆடம்பரம் என்றால்   வெறுத்து ஒதுங்கியவர்கள்.

கானகவாசம்  குடிசை  வாசம்  தவம் தியானம்.
ஆனால்  இன்றைய ஆன்மிகம்   ஆஸ்தி சேர்க்கிறது. 

ஆசார்யர்கள்  சாமியார்கள் பொற்கிரீடம் ,

பொன்னாசனம்  கேட்கின்றனர்.

கொடுப்பவர்களுக்கு  பணம் வரும் விதம் என்ன ?

கொடுப்பவர்கள் வாழ்க்கைத்தரம் என்ன ?

கொடுப்பவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள்  என்றால்,

ஏழைகளுக்கு இறைவன்  வரம் /அருள்  கிட்டாதா/?

அரசபோகம் துறந்து  கானகம் சென்றார் சித்தார்த்தர் 
ஞானம்  பெற்றார். புத்தர் ஆனார் 
அதில் ஆடம்பரம் கருத்துவேறுபாடு 
இரண்டுபட்டது புத்த மதம்.

தோற்றுவித்தவர்கள் மனித நேய  ஒற்றுமைக்கு என்றால் 

பின்னால் வந்தவர்கள் இரண்டுபடுத்தும் காட்சி .

இஸ்லாம் என்றாலும் கிறிஸ்தவம் என்றாலும் 

ஹிந்து  என்றாலும் மனித ஒற்றுமை இல்லா வேற்றுமைகள்.

உருவமில்லா இறைவன் உருவமற்ற இறைவன் ,

ஒரேமதத்தில்   இந்த வேறுபாடு .

இறைவனின் பல உருவங்கள் ,மந்திரங்களில் சில மாற்றங்கள் 

சிவா விஷ்ணு  வேறுபாடு.
சியா  சன்னி  என்ற வேறுபாடு 
காதொலிக் ப்ரோடேஸ் டாண்டு 

இன்னும் எத்தனையோ  இறைவன் வழிபட ஒற்றுமை இல்லா 

வையகம் ,இதற்கு அடிதடி குத்து வெட்டு கொலைகள் 

எந்த மத  ஆ ண்டவன்  சொன்னான் 
என்னை வழிபடா ,என் வழி  வரா ,மனிதனைக் கொன்று குவி .

அன்பில்லா  ஆண்டவன்  இரக்கமில்லா
ஆண்டவன் இல்லை வையகத்தில் 
மனித ஒற்றுமைகாணா   மதவாதிகள் 
ஆன்மிகம்  புரியா தெளியா  மேதைகள் 
உள்ளவரை  உலகில் இல்லை அமைதி.
வெறுப்பில்  வேதனை தானே மிஞ்சும்.

அன்பு  ,மனிதநேயம் மனித ஒற்றுமையே 

ஆன்மிகம் ஆடம்பரமல்ல . 




Wednesday, April 29, 2015

அமைதி ,ஆரோக்கியம் ,ஆஸ்தி தரும்.

ஆண்டவனிடம்  பிரார்த்தனை

 இன்றைய யுகத்தில் மட்டுமா?

முருகன்  விநாயகனிடம்  வேண்டுகோள்

வள்ளி -முருகன்  காதல் .

இன்று திருப்பதி ஏழுமலை  வெங்கடேசா ,

காதலுக்கு பச்சை கொடி  காட்டுராஜா.

என்றுமே  காதல் என்றாலே போராட்டம் .

தக்ஷன் மகள் சிவனைக் காதலித்ததால் 

தக்ஷனுடன் போர்.

மனிதக் காதல்  நிறைவேறவே  போராட்டம் 

இறைவனை  காதலித்து வரம் பெற போராட்டமே வேண்டாமே .

மீரா ,ஆண்டாள் ,ரமணர் ,தியாகராஜர் ,ஆதி சங்கரர் 

புத்தர் ,நபிகள் நாயகம் அனைவரும் 

காட்டியது  ஒருமையுடன்  தியானம் .
மன ஒரிமைப்பாட்டுடன்  ஆழ்நிலை தியானம்.
இவ்வழி   சாதாரண இல்லற உலகியல்  வாழ்க்கையிலும் 

இன்னல் இல்லா வாழ்க்கைக்கு 

இன்புற்று வாழ  பிரார்த்தனை 

அமைதி ,ஆரோக்கியம் ,ஆஸ்தி தரும்.





Tuesday, April 28, 2015

அறமும் மறமும் மறையும் அதுவே.

  புவியினில்  பூகம்பம் வந்தால் ,

சுனாமி வந்தால்,

பு யல் காற்று  வந்தால்.

ரயில் விபத்து  வந்தால்.

விமான விபத்து வந்தால்,

குண்டு வெடித்தால்

மழை  வெள்ளம்  வந்தால்

சுருக்கமாகச் சொன்னால்

ஆயிரக்கணக்கில்  பேரழிவு வந்தால்

பஞ்சம் வந்தால்

அனைவருக்கும்  போதுவானதுன்பம்

காலனின்  அழைப்பு வந்தால்

கடவுள் ஒருவரே என்ற ஞானோதயம் .

அன்பு ,அஹிம்சை ,அரவணைப்பு ,

தானம் தர்மம்  ஒற்றுமை உணர்வு

இந்த   இறைவன் ஒருவனே

சமரக்ஷை ,சம அழிவு ,சமத்துவம்

இயற்கையின்  தத்துவம் ,

இயற்கையின்  மாற்றம்

இயற்கையின் சீற்றம்

என்ற எண்ண  உணர்வு என்றும்

நிலைத்தால் அழியும்  உலகில்

ஆண்டவன் அருளும் ,

மனிதநேயமும்

மத இறை பேத சண்டைகள் இன்றி

அமைதி யுடன்   ஆனந்தம் பேரானந்தமே.

இறைவன் ஒருவன் என்ற உணர்வே மனித

ஒற்றுமைக்கு  ஓர்  உன்னத வழிகாட்டி.

அறமும் மறமும் மறையும் அதுவே.


Monday, April 27, 2015

அவனின்றி ஓர் அணுவும் அசையாது.

இறைவன்  இனியவன் ,

இன்னல் தீர்ப்பவன்

அனைவரையும் சமமாக

அரவணைக்கும் ஆண்டவன்.

அவனில் பேதம் ஏன்?

இயற்கை சீற்றம்  பேதம் பார்ப்பதில்லை.

தேனின் சுவை அனைவருக்கும்  ஒன்றே .

வேப்ப எண்ணெய் கசப்பும் ஒன்றே .

கல்லின் அடி வலி ,கத்திக்குத்து வலி

வேதம் பயின்றாலும் ஒன்றே .

குரான் தொழுதாலும் ஒன்றே .

பைபிள் படித்தாலும்  ஒன்றே.

இறை பேதம் சொல்லி மனிதபேதம் கொண்டு

குறை சொல்லி ஒன்றை உயர்த்தி ஒன்றை தாழ்த்தி

வெறிகொண்டு வெறுப்புடன்  வேறுபடுத்தி

இறைவனை கூறுபோடும் பக்தி

அமைதிக்கு  வழி இல்லை .

ஆண்டவனை சிவன் விஷ்ணு ராம் ,கிருஷ்ணன்

அல்லா  இயேசு என்று வழிபடும்போது

அனைவரின் அருளும் வழியும் ஆசியும்

அன்புள்ளம் கொண்டோருக்கே .
சத்திய வழி  ஒன்றே.
மனித சேவையே மகேசனின் சேவை.
அறவழி செல்வோருக்கே  ஆண்டவன் அருள்.
அன்பு ,சத்தியவழி செல்வோருக்கே ஆண்டவன் அருள்.
நேர்வழி செல்வோருக்கே ஆண்டவன் அருள்.
தானதர்மம் செய்வோருக்கே ஆண்டவன் அருள்.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது.
அவன் சீற்றம்,அவன் தண்டனை
வேதம் படிக்கும் பாவிக்கும் ஒன்றே.
குரான் படிக்கும் பாவிக்கும் ஒன்றே
பைபிள் படிக்கும் பாவிக்கும் ஒன்றே.
வழிபடுங்கள் இறைவனை,
வாழுங்கள். மற்றவரையும் வாழவிடுங்கள்.
அஹிம்சை  அவனுக்கு பிடிக்கும் .
அன்பே ஆண்டவன்.

Monday, April 20, 2015

அந்த வழிபாட்டின் அருளே , ஆண்டவன் ஏற்று தரும் கருணை ,அருள்.

இன்று  எனது நண்பர்  எண்ணிய எண்ணங்கள்

ஏற்றமடைய வேண்டும்  என்றார் .

மனிதன்  என்ன எண்ணுகிறான் ?

நிலைத்த  எண்ணங்கள்  மனதில் உள்ளனவா ?

ஆன்மீகத்திலும் சரி ,அரசியலிலும் சரி

அலைபாயும் எண்ணங்கள் ,

இறைவனின் ஆன்மீகச் சொற்பொழிவு ,

மனிதமனத்தில்  தெளிவு பிறக்கவேண்டும்.

ஆன்மீகத்தில்  பல இறைவனைக் கூறுகின்றனர்.

எண்ணங்கள் மாறுகின்றன.

இந்த எண்ண  மாற்றங்களால்

சக்திக்கு ஒரு இறைவன் ,முக்திக்கு ஒரு இறைவன் ,

ஆஸ்திக்கு  ஒரு இறைவன் ,உலகியல் இன்பத்திற்கு

ஒரு  இறைவன் ,

ஒரு மனைவியுடன் வாழ ஒரு இறைவன் ,

இருமனைவியுடன்  வாழ ஒரு இறைவன் ,

பிராமச்சரியத்திற்கு  ஒரு இறைவன் ,

பிணி  தீர்க்க ஒரு இறைவன்  என்றால்

கல்லூரியில்  விருப்ப பாடம் போல் இறைவனை

தேர்ந்தெடுத்து  வாழும் கலை  வளர்க்கும் எண்ணம் .

இறைவன்  வழிபாட்டில்  இறைவன் ஒருவனே

அனைத்தும் தருபவன் ,

என்ற மன ஒருமைப்பாடு தேவை .

அரசியல் தலைவர்கள் போல் ஆன்மீகத்தலைவர்கள் ,

தங்களுக்கென  ஒரு கூட்டம் ,ஆஸ்தி சேர்ப்பதில்

ஆன்மீகத்தில் அலைபாயும் மனம் .

இந்த மன ஒருமைப்பாடு  மனித ஆற்றலுக்கு அப்பால்

ஒரு  இயற்கை சக்தி ,இறை சக்தி ,

இதையே சித்தர்கள் ,யோகிகள் கூறி

இயற்கையைப் போற்றி   வணங்கினர்.

கோள்கள் வழிபாடு ,பஞ்சபூத வழிபாடு ,

இயற்கையை மாசுபடுத்தா வழிபாடு ,

வையகம்  வாழ  வழிபாடு

மனித நேய வழிபாடு

இதை உணரா  வழிபாடு

இறைவழிபாடு  அல்ல என்றே

இறைவனை  ஒரே எண்ணத்தில் வழிபட்டால்

இன்னல் களையும். இதுவே  இறைவனைக்

காணும் அருள் தரும்  எண்ணமாகும்.

தெளிந்த மனதுடன்  இறைவனை வழிபட வேண்டும்.

இந்த  ஆலயம் ,அந்த  ஆலயம் ,

இந்த  ஆஷ்ரமம் ,அந்தாஷ்ரமம் என்று அலைபாயும்

மனதால் ஆண்டவன்   வழிபாட்டில் அலைபாயும் எண்ணம்.

மத மாற்றம், மனித ஒற்றுமை இன்மை ,இறைவன் பெயரால் கொலை

இதல்ல  ஆன்மிகம் ஆண்டவன் அருள் பெரும் வழி.

வையகம்  இன்புற ,அமைதி ,அஹிம்சை ,சர்வே ஜனா சுகினோ பவந்து

அனைவரும்  இன்பமுடன் இருக்கவேண்டும்

இதுவே  இறைவழிபாடு .

அந்த வழிபாட்டின் அருளே  ,

ஆண்டவன் ஏற்று தரும்  கருணை ,அருள்.




Sunday, April 19, 2015

அவனை அறிந்தவர்கள் மாணிக்கமே .

ஆண்டவனின்  அதிசய ரஹஸ்ய  படைப்பு ,

யாரே  அறிவர் ?

காட்டுப் பூ போல் கர்ணனைப் படைத்தார் .

பூக்கள் அரசவையில்  மட்டும்  பூப்பதில்லை

நகரத்தை விட்டு தொலைவில்  காட்டிலும் பூக்கின்றன .

இந்த கடும் இயற்கையின் மந்தணம் யார் அறிவர் ?

காட்டில் மலர்ந்தாலும் அப் பூ மணத்தால் ,அழகு தோற்றத்தால்

குணத்தால் ,காணும் மக்களின் உளம் கவர்கின்றன .

பங்களாக்களின் அழகுப்பூக்கள்  தென் படுகின்றன.

காட்டுப்பூக்களின்  சக்தி  தானாக வெளிப்பட்டு

மதிப்பைப்  பெருகின்றன.

பிறந்த இடம் அரண்மனையானாலும்  திறமை இன்றி

பெருமை யாரும் அடைவதில்லை.

சேற்றில்  மலர்ந்த செந்தாமரை போல்,

குப்பையில் கிடக்கும் மாணிக்கம் போல்

குணத்தால்  பண்பால் உயர்வோர் பலர் .

ஆண்டவனின்  இயற்கை அதிசயங்கள் ,கடும் மந்தணங்கள்.

அவனை அறிந்தவர்கள்  மாணிக்கமே .

Thursday, April 16, 2015

இவை விடுத்து இறைவனைதுதித்து இன்புற்று வாழ்வோம்.

   வையகம்  -இதில் ஆண்டவன் ஒரு புரியாத  புதிர்.

மனிதன்  விருப்பங்கள் நிறைவேறும் வரை.

ஆனால், மனித முயற்சிகள்  தோல்விகாணும் போது

அவன்  மனம் தளரும் போது ,

அவனுக்கு ஒரு நம்பிக்கை ,ஒரு பிடிப்பு , ஒரு முயற்சி ,

ஊக்கம்  தேவை.

அது எப்படி கிடைக்கும்?

இவை கிட்டாத போது ஒரு நொடியில் தற்கொலை /கொலை .

இது மனிதனுக்கு  ஏற்ற வழியா /??

அப்பொழுது  அவனுக்கு ஊக்கம் அளிப்பது  ஆன்மிகம்.

உலகம் ,நாம் என்று நினைக்கும்  மனிதன்

எவ்வித  தோல்வியும்  சந்திக்க முடியாமல்  தன்னையே

அழித்துக்  கொள்ள  லௌகீகம்  தூண்டும்.

ஆன்மிகம்  உன் க்ரஹநிலை  சரியில்லை .

இறைவனை வழிபடு  என்று ஆற்றுப்படுத்தும்.

நாற்பத்தைந்து  நாள்  இந்த மந்திரம் சொல்.

இந்த கோவிலுக்குப்போ .

அவனுக்கு  வாழ  நம்பிக்கை  அளிக்கும்.

தம்மினும் மெலியாரை நோக்கி ,அம்மா!

பெரிதென்று அக மகிழ்க --இது ஒரு தத்துவம்.

புத்தர்  பிறப்பு ,மூப்பு .இறப்பு   மூன்றிலும் வையகம் படும்

துன்பம்  கண்டார்.துறவியானார் .

அவருக்கு  கிடைத்த ஞானம் --அன்பு ,சேவை ,புன்சிரிப்பு .புலனடக்கம்.அஹிம்சை .

இதையே  ஆன்மிகம் --

காமம் ,குரோதம் ,ஆணவம் பேராசை ,
இதையே வள்ளுவர் அறம் பற்றி கூறும்  போது-

அழுக்காறு ,அவா,வெகுளி ,இன்னா சொல் இவை  நான்கும் மிழுக்கா இயன்றது அறம்  என்கிறார்.

காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடக் கெடும் நோய்.  என்கிறார்.

எனவே  இவை விடுத்து இறைவனைதுதித்து 

இன்புற்று   வாழ்வோம்.





Tuesday, April 14, 2015

அதுவே ஆண்டவனின் அதிர்வலைகளைத் தந்து ப்ரஹ்மானந்ததைத் தரும்.

இறைவன்    இதயத்தில்  இருக்கவேண்டும்.

இறைவனைக்கண்டவர்கள்  இறைவனைத்தேடி 

இங்கும் அங்கும்  அலைவதில்லை.

எங்கும் வியாபித்திருக்கும் இறைவனை தேடி 

செல்லவேண்டும்  என்றது  இறைவனின் இயற்கையின் 

விந்தைகளைக்  காணவே.

இறைவனை தீர்த்த  யாத்திரை சென்றால்  காணலாம் 

இது ஒரு இறைவனின் அச்சம் காட்டி  செல்லத்தூண்டுதலே.

ஒவ்வொரு தீர்த்த ஸ்தனங்களுக்கும் ஒரு சிறப்பு குணம் உண்டு.

ஒவ்வொரு  புனித இடமும் ஒரு விஷேச  காற்றலை ,

ஒலி-ஒளி அலைகளைக் கொண்டது.

நீர் நிலைகள் விஷேச  தன்மை கொண்டவை.

கர்ப்க்ரஹ அமைப்பும் ஒரு தெய்வீக அதிர்வு   அலை கொண்டது.

ஒரு    உண்மையான   பக்தனுக்கு  அவன் இருக்கும் இடத்திலேயே 

அனைத்து தெய்வீக  அலைகளும்  தானாகவே வந்துவிடும்.


இறைவன்  பக்தனின் வீட்டில் வேலைக்காரனாக இருந்த 

இதிகாசங்களும்  கதைகளும்  உள்ளன.

இருந்த இடத்தில் இறைவனின் அதிர்வலைகள் பெற முயலுங்கள்.

அதுவே ஆண்டவனின் அதிர்வலைகளைத்  தந்து 

ப்ரஹ்மானந்ததைத் தரும்.


****************************************************************************************

मंगल सूत्र  एक पवित्र सूत्र  हिन्दुओं के लिए.
उनको निकाल फेंकने का  आन्दोलन तमिलनाडु में.
उच्च न्यायालय  ने   सरकार  की रोक तोड़ दिया .
राम को जूते से मारा; हर चौराहे  पर भगवान नहीं का  इश्तहार.
करोड़ों  दुखी हिन्दू  सह रहे हैं मुट्टी भर द्रमुख -दल वालों  के कडुवी कदम  पर;
विष वृक्ष के समर्थक करुणा अपने बहुओं को भेजा नहीं 
मंगल सूत्र तोड़ने केआन्दोलन  के लिए.
भगवान  नहीं  कहते  हैं ,
पर मंदिरों की संख्या बढ़ रहे  हैं.
मंदिरों  की  आमदनी  भी.
भगवान तो अपनी शक्ति  के दर्शन दे रहे हैं;
न समझ स्वार्थियों  के भ्रष्टाचार भी बढ़ रहे हैं.
भगवान तो महसूस करने का ब्रह्मानंद ;
है  वे तो नचा रहे हैं ,देख रहे हैं तमाशा .
  மன்மத  ஆண்டு   தமிழ்ப் புத்தாண்டு 

மன மகிழ்வுடன்  மன நிறைவுடன் 

இன்னல்கள்  நீங்கி  இன்புற்று வாழ 

இறைவன் அருள் பொழிய ,

இன்பங்கள் பொங்க,

ஈடில்லா ஏற்றமுடன் 

எண்ணிய எண்ணங்கள் நிறைவேற 

ஐயமின்றி 

பாரதமக்கள்  ஒற்றுமையுடன் வாழ

இந்த  ஆண்டு தமிழகத்தில் மட்டுமல்ல

பாரதத்தின்  பல மாநிலங்களில்  வெவ்வேறு  பெயரில்

கொண்டாடப்படுகிறது.

Wish you all a Happy Thamizh Puththaandu (Tamil New year),
Vishu (Kerala Festival),
Bisu (Thuluva New year in Karnataka),
Pohela Boishakh (Bengali New year),
Mahabishuba Sankranti (Odhisha New year),
Rongali Bihu (Assam New year),
Baisakhi (Punjabi Festival, Sikh New Year),
Chaitra Pratipada (UP, Bihar Festivities),
Judi Sheetal (Maithili New Year)!
Also, Vaishak Ek (Nepali New Year),
Aluth Avurudda (Sinhalese New Year in Sri Lanka),
Thingyan (Burmese New Year in Myanmar),
Chol Chnam Thmey (Khmer New Year in Cambodia),
Songkran (Thai New Year), Songkan (Laos New Year).
All these festivals on 13-14-15 April. What a great season of joy ! A celebration that symbolizes the great Pagan heritage that unifies all humanity, nurtured down the centuries by all the Dharma religions and Asian cultures.
With the flowers in full bloom and the scent and taste of Mango in the air, It is the onset of Vasanta Ritu (Spring) and a great time of celebration in almost every region of Sub continenet.
Celebrate these festivals rooted in our culture and tradition with great joy and pomp.


Friday, April 10, 2015

அவனியில் இல்லை அல்லல்.

ஆண்டவன்  அறம் விரும்புவான் .

அவன்  சொத்தை அபகரிக்கும் கூட்டம்,

அவன் சந்நிதானத்திலேயே  ஏமாற்றும் கூட்டம்.

அவன் ஆலயத்தில் பாதாள அறைகளில் ஆபரணங்கள்

அதை அபகரிக்கும் கூட்டம்.

அசத்தியத்தை சாத்தியமாக்கி அலைமகள் கருணை பெரும் கூட்டம்.

அனைத்தையும்  அவன்  பார்த்தாலும்

பார்க்கவில்லை   என்றே  பாரில் உள்ளோர் நினைக்கின்றனர்,

ஆனால் பார் !சாஸ்வதம்  இல்லை  பார் !என்றே  ஒருநாள்

பாரின்  பாரம்  மறந்து  ஆண்டவன் உயிர் எடுக்கும் நாள்.

அதுவே அவன்  தீர்ப்பு. இதை அனைவரும் சொன்னாலும்

அவனி அதை பொருட் படுத்துவதில்லை.

ஆவி போகும்  நேரத்தில்  அவனை அறிந்து

என்ன  பயன் ?  சொன்னதே சொல்லி

வரும் ஆன்மிகம் ,அது  அறிவியல்  இல்லை .

உண்மை. மாற்றத்திற்கு சாத்தியமில்லை.

சத்யதேவன்   தர்மதேவன் --அறிந்தால்

அவனியில்  இல்லை அல்லல்.

Monday, April 6, 2015

அதுவே இறைநிலை.

இறைவன்  இன்பம் அளிப்பவன் .

இறை  இன்பம் நிலையானது.

இப்புவி இன்பம்  நிலையற்றது .

தற்காலிகமானது .
ஆடம்பரமற்ற 
ஆனால்   புவியில் வாழும் நாம் 

அருள் பெறவே பொருள் வேண்டுகிறோம்.

ஆனந்தம்  என்பது புறவாழ்வு ,

ஆடம்பரம்  அலங்காரம்  அதிலே தான் இறைவன் 

 அனாவசிய எண்ணங்கள் ,புற விருப்பங்கள் 

மன தியான ஒருமைப்பாட்டை தடுக்கும் .

ஆடம்பரமற்ற  ஆழ்நிலை தியானம் 

ஆலயங்களில்  அமைவது கடினம்.

புற ஆடம்பரங்கள் தவிர்த்து  பக்தியில் நாட்டம் 

ஏற்பட ஆலயங்கள் ஆரம்பத்தில்   உதவும்.

மன சஞ்சலமின்றி இறைவனைக் கண்டு பேரானந்தத்தில் 

பேட்டிகண்டோர்   இறைவனைக் கண்டோர் 
ஏகாந்த தியானம் செய்தோரே.

ரமணரும் ,புத்தரும் அல்லாவும் 

தனிமைத் தவத்தில் இறை செய்தி பெற்று 

இப்புவி உய்ய  தெய்வீக செய்திகள் தந்தார்களே.

வால்மீகி தவம் ,துளசியின் தவம் தனித்து 

அரிய   பொக்கிஷம் ராமாயணம். 

அறிவியல் கண்டுபிடிப்புகள்  அவர்களின் மன ஈடுபாடு.

சாப்பிட்டார்களா ?இல்லையா ?என்பது தெரியா ஆராய்ச்சி ,

நம்மில் தொலைக்காட்சி பெட்டியிலும்,

கைபேசியிலும்  பலர்  மனம் லயித்தால் 

வருவோர் போவோர் தெரியாது.

அந்த மன லயம் ஈஸ்வர வழிபாட்டில் ஈடுபடவேண்டும்.

பசித்திரு -தனித்திரு என்றார் விவேகானந்தர் ,

அவர் அலைபாயும் கடல் பாறையில் அமைதிகண்டார் 

அமைதி .அமைதி.அமைதி .

சாந்தி ! சாந்தி. சாந்தி!

அதில் அடையும் பிரம்மானந்தம் 

அதுவே பரவசம் . பரமானந்தம்.

புற ஆசை மறந்து அக அமைதி.

அதுவே  இறைநிலை.

இறையன்பு.

முக்திநிலை.

சித்தி நிலை. 





Sunday, April 5, 2015

நாம ஜபங்கள்.


ஓம் கணேசாய நமஹ
ஓம் முருகா
ஓம் நமஹ சிவாய
ஓம் துர்காய நமஹ

ஓம் நாராயணா
ஸ்ரீ ராம்
ஹரே ராம்
ஹரே ஸ்ரீ கிருஷ்ணா
சரணம் ஐயப்பா !
ஆஞ்சநேயா !
கந்தா !
கடம்பா !
கார்த்திகேயா!
கலியுக வரதா!
கோவிந்தா!

ஆபத்பாந்தவா !
அனாத ரக்ஷகா !
காளி!
சாயீராம்

மகாமாயி,

முநீஷ்வரா

சநீஷ்வரா

அட !கடவுளே!
அட !ராமா !

அல்லா!ஏசுவே!

   இது அனைவரும் வழிபடும்  நாம ஜபங்கள்!

துன்பங்கள் /துயரங்கள்/ இன்பங்கள் / ஆகிய நேரங்களில் துணை நிற்கும்.

 ஆனால் இதில் வேற்றுமை ,வெறுப்பு!ஏன்!





Saturday, April 4, 2015

ஆன்மிகம் வேண்டியதில்லை பாரினில்.

பாரினில்  பகவான்  படைப்பில்  ,

 பல அதிசயங்கள்.

பரவசங்கள்.

பக்தி  என்பது  மனிதனின்  கடும் முயற்சி

  பலன் அளிக்காமல்  போனால் தீவிரமாகிறது.

ஒரு கப்பல் மூழ்கும்  போது அனைவரும் மூழ்கி

முக்தி அடைகின்றனர்.

ஒரு விமான விபத்தில் அனைவரும் மரணம்.

ஒரு ஹிந்து தப்பிக்க முடியாது.

ஒரு இஸ்லாமியன்  தப்பிக்க முடியாது .

ஒரு கிறிஸ்தவன் தப்பிக்க முடியாது.

இயற்கை சீற்றம் ,பஞ்சம்  என்றால் அனைவருக்கும் பாதிப்பு.

பாலைவன மணல்  அனைவரையும் சுடும்.

அல்லா என்றால் ,சிவா   என்றால் ,ஏசு என்றால் சுடும் மணல்

குளிர் சாதனம் ஆகுமா?

இயற்கை    அனைவருக்கும் பொது .

இறைவன்  படைப்பது.

சூரிய ஒளி,சந்திரன் ஒளி,அமாவாசை இருட்டு  பொது.

மனிதர்களை ஒற்றுமைப் படுத்தவே  மதங்கள்.

மனிதர்களை  வேறுபடுத்துவது  மனித அறிவு.

மனிதர்களை  ஒற்றுமைப் படுத்துவது ஆன்மிகம்.

ஒற்றுமை இல்லா ஆன்மிகம் ,மனிதநேயம் வளர்க்கா ஆன்மிகம்,

மனிதர்களை  வேறு படுத்தும்  ஆன்மிகம் வேண்டியதில்லை

பாரினில்.