Saturday, February 14, 2015

முகவர் தேவையா ?ஒரு பொறி போதுமே .

எங்கும் நிறைந்துள்ள இறைவனைக்கண்டவர்களின்
வரலாற்றை மிக பக்தி சிரத்தை உடன் படித்தால்
இறைவனுக்கும் இறைவனுடன் பேட்டிகண்ட அருளாளனுக்கும்
இடையில் எந்த முகவரும் இருந்ததில்லை.
ஆதிசங்கரர் ,புத்தர்,முஹம்மது நபி ,ஏசுநாதர் இவர்களுக்கு
இறைவன் அளித்த ஞானம் நேரடியானது.
ஞானம் பெற்றோருக்கு அடியார்கள் கூட்டம் பெருகியது.
பின்னர் ஏற்பட்டதே குரு பரம்பரை.
ராமகிருஷ்ணரின் வாழ்க்கையும் சரி ,
ராமநாமஹரிஷியின் வரலாற்றிலும் சரி
பக்த தியாகராஜர் வாழ்க்கையிலும் சரி
இறைவன் நேரடி அருளே.
கபீர் ,துளசி தாசர் ,ரைதாஸ் ,நந்தனார் ,கண்ணப்பர் வள்ளலார்,பாம்பன் சுவாமிகள்,எத்தனையோ மகான்கள்
இறைவனின் அருளை ஒரு சிறிய உந்துதலால் தன் சுய ஈடுபாட்டால் உணர்ந்தவர்களே.
ஒரு சிறு அனல் அல்லது பாரதி சொன்னதுபோல் ஒரு அக்னிக்குஞ்சு பக்தர்மனத்தில் பதிந்தால் மனம் சிதறாமல்
ஒரு மன நிலை ஆழ் மன தியானம் ஏற்படும் .
துருவனுக்கும் அப்படியே ,பிரஹலாதனுக்கும் அப்படியே.
இந்நிலையில் இறைவனை அடைய சிறு தூண்டுதல் போதும்.
முகவர்கள் வேண்டியதில்லை.
மந்திரங்கள் வேண்டியதில்லை.
தந்திரங்கள் வேண்டாம்.
இறைவனின் முழு பாதுகாப்பும் கிடைக்கும்.
மனச்சஞ்சலம் ஓடிவிடும் .

No comments: