Monday, February 2, 2015

ஜெபிப்போம் .ஜெயம் பெறுவோம்.

தைப்  பூசத்  திருவிழா ,

தையல் நாயகியின்  அருமைப் புதல்வல்வன் 

கார்த்திகைப்  பெண்களின்   கரங்களில் தவழ்ந்தவன்,

கந்தன்  கலியுகவரதன்  அபிஷேகப் பிரியன் ,

காவடிகள் எடுத்துவரும் பக்தர்களின் 

கவலைகள் போக்குபவன் ,அருளாளன் .

அருணகிரிக்கும் பாம்பன் சாமிகளுக்கும் 

பொய்யாமொழி  புலவருக்கும் ,

திருமுர்காற்றுப்படை எழுதிய நக்கீரனுக்கும் 

எத்தனையோ கோடி பக்தர்களுக்கும் 

எண்ணற்ற வரமும்  அளித்து ,

ஏற்றமிகு வாழ்வளித்தவன்  .

அறுபடை வாசன் ,

அவன் அருள் பெறவே இன்று போற்றிடுங்கள் .


முருகா முருகா முருகா என்றாலே 

முக்தி கிடைத்திடும் .

வேலா,வேலா என்றாலே வல்வினை தீர்ந்து 

வெற்றிகளும் குவிழ்ந்திடும்.

கந்தா ,கந்தா ,கந்தா என்றாலே 

கண்ட வினைகள் தீர்ந்து விடும்.

கலியுக  பாவிகளின் பாதிப்பு வராது.

கந்தா ,கடம்பா ,கதிர்வேலா ,முருகா என்ற நாமங்கள் 

கனிவுதரும் ,கஷ்டங்கள் தீர்க்கும் ,முக்தி ஞானம் பிறக்கும் .

தைப்பூச நாளில் தையல்நாயகி ,

மலைமகள் ,பெரியநாயகி ,உமையாள் 

என்ற உன்னத நாமமமுடையாளின் 

உத்தம புதல்வனை ,தந்தைக்கு உபதேசித்த ஞானவேலனை 

போற்றுவோம் , ஜெபிப்போம் .ஜெயம் பெறுவோம்.





No comments: