Saturday, January 31, 2015

மனிதப்பிறவி தப்புவது எப்படி.?

பாவங்களுக்கு  பகவானின்  மன்னிப்பு ,

பகவானிடம் பிராயச்சித்தம்.

இறைவனிடம்  பிரார்த்தனை ,

யாகங்கள் பிராயச்சித்தங்கள்.

தசரதரும் யாகம் செய்தார் ,

ராமரும்  அஸ்வமேத யாகம் செய்தார்.

ராவணனும் தவம் செய்தான் . ஆனால்

யாருக்கும்  பகவான் நிம்மதி தரவில்லை.

புத்திரசோகம் செய்த பாவம் விடவில்லை தசரதருக்கு.

ராமன்  வாழ்வில் நிம்மதியில்லை ,
மனைவியிருந்தும் இல்லை,
ராவணனுக்கு  தவவலிமை

 இருந்தும் இல்லை நிம்மதி.

கிருஷ்ணனே உடனிருந்தும்

இறுதிவரை துன்பமே .


தங்கக் குடமளித்தாலும்
தங்க யானை அளித்தாலும்

செய்த பாவங்களுக்கு தண்டனை உண்டே

கண்ணனும் அடைந்தான் ராமனும் அடைந்தான்

தெய்வப்பிறவி என்போருக்கே  பாரினில் துன்பம் என்றால் ,

மனிதப்பிறவி  தப்புவது எப்படி.?





Saturday, January 24, 2015

.வைய வாழ்வில் என்றும் இன்பமே.

  இன்பமுடன்  இருக்க ,

இறைவனை  வழிபடுவோம் .

இறைவன்    இருக்கிறானா இல்லையா ?

என்ற எண்ணமே வேண்டாம் .

எண்ணங்கள் மனஓட்டங்கள் ,

சமுதாய ஏற்றங்கள் தாழ்வுகள் 

நியாயங்கள் -அநியாயங்கள் 

இவை எல்லாமே மாயத் தோற்றங்கள் .

இவைகளுக்கு மேல் ஒரு ஆற்றல் 

ஆட்டிப்படைக்கும் இன்ப-துன்பங்கள்.

அகிலத்திலும் நடக்கும் ஆச்சரியங்கள் .

அதுவே வெல்ல முடியா ,
அறிய முடியா ,
தெளிய முடியா 
புரிய முடியா  
புவி இயல் மாற்றங்கள்.
அதுவே இயற்கையின் இறைவனின் அற்புதம்.

ஆற்றல் மிகு மனிதனின் மூப்பு இறப்பே 

இறை சக்திக்கு ஒரு சான்று .

அதை வெல்ல இல்லை இல்லவே இல்லை 
மற்று ஓர்  ஆற்றல்.

மரண நேரத்தில் அவனை நினைக்காமல் 

சதா சர்வகாலமும் அவன் சக்தி அறிந்து 

வழிபட்டால்  

வையக வாழ்வில் என்றும் இன்பமே .




 ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள் ;--



insaaniyat -manushyata -इंसानियत -मनुष्यता - மனிதத் தன்மை (உர்து-ஹிந்தி )

majhab --mat -- मज़हब -मत  மதம் உர்து-ஹிந்தி 

naheen  sikhatae ekta. --नहीं सिखाते  एकता -ஒற்றுமை கற்றுத் தருவதில்லை 

toophan -aandhee sunaami sikhate manushy kee ekta .तूफान -आंधी -सुनामी सिखाते  मनुष्य की एकता  புயல் -சூறாவளி மனித ஒற்றுமை கற்றுத்தருகின்றன.

havaayee jahaj kee durghatna ya jahaj ka doobna sikhata -manav ekta.
हवाई जहाज की दुर्घटना  या जहाज़ का डूबना सिखाता -मानव एकता.
விமான விபத்து அல்லது கப்பல் மூழ்குதல் கற்றுத்தருகிறது 
மனித ஒற்றுமை.

badh-dhoop -sardee sab ke barabar.बाढ़ -सर्दी -धूप सब के बराबर.
வெள்ளம் -வெயில் -குளிர் எல்லோருக்கும் சமம்.

shaareerik bandhan -bachche  yutpaadan -antar dharm ke sambhog men bhee barabar.sukh

शारीरिक बंधन -बच्चे उत्पादन -अंतर धर्म के संभोग  में भी बराबर सुख.
உடல் கட்டு -குழந்தை உற்பத்தி -வேற்றுமத உடல் உறவு இன்பம்  சமமே 


swarth sikhata /ahankar sikhaata manushy -manushy men bhed 
स्वार्थ सिखाता-अहंकार सिखाता मनुष्य -मनुष्य में भेद.
சுயநலம் கற்றுத்தருகிறது -ஆணவம் கற்றுத்தருகிறது -மனிதர்களுக்குள் வேற்றுமை.

maaro -kaato apna mazhab badhaao 
मारो -काटो अपना मज़हब बढाओ
அடி-கொல்லு  தன் மதத்தை வளர் 

dhan do to do mandir -masjid 
धन दो तोड़ो मंदिर -मस्जिद 
பணம் கொடு கோயிலை இடி -மசூதி இடி.

aise dharm-vishvaasee ko khuda ya eeshvar  naheenchaahta
ऐसे धर्म विश्वासी को खुदा-ईश्वर नहीं चाहता..
இப்படிப்பட்ட தர்மத்தை கடவுள் விரும்புவதில்லை.
khuda--கடவுள் -ஈஸ்வர் -கடவுள் 


khuda ya eeshvar ke bhakt ho to taaleem yaa shiksha  lo .
खुदा या ईश्वर के भक्त  हो  तो तालीम या शिक्षा लो 
கடவுளின் பக்தன் ஆனால்  கல்வி பேரு 

manush manushy prem -ekta-manavata /insaaniyat ka.
मनुष्य -मनुष्य प्रेम -एकता -मानवता /इंसानियत का 
மனிதருக்குள் அன்பு -ஒற்றுமை -மனிதத்தன்மை 

n to khuda maaph naheen karega ya eeshvar kshama naheen karega.
न तो खुदा माफ न करेगा . ईश्वर क्षमा न करेगा 
இல்லை என்றால் குதா  மன்னிக்கமாட்டார் . கடவுள் மன்னிக்கமாட்டார்.




Saturday, January 17, 2015

கரி முகத்தான் பாதம் பணிவோம்.

அருகம்புல்  போதுமே ,அரிய பக்திரசம்  காட்ட,
கரி முகத் தோனே ,  கருணை  வடிவோனே,
கலக்கம் தீர்ப்போனே ,கரைகளில் அமர்வோனே .
கணங்களின் நாயகனே,கணநாதா,காப்பாற்ற வருவாயே.

கற்பகவிநாயகா,கற்பனைவளம் தர  வருவாய்;
கல்லாத கவி  ஒவ்வாததை எழுதும் என் ,
கவித்தவற்றை மன்னிப்பாயாக்,

சக்திவிநாயகா!சங்கடங்கள் தீப்பாயாக.
சித்திவிநாயக சித்திதாருமையா.
வர சித்தி விநாயக வரம் தாருமைய.
ஔவையாரின் அகமகிழ்வோனே!
ஔடதமாய் வருவாய் அப்பா.

எழில் நாயகன்!எங்கும் வியாபித்து இருப்போன்!

அரமரத்தடி அமர்ந்த பெருமான்!

ஆனந்த விநாயகன் ,கலியுக தெய்வம்!

கரிமுகத் தோன்  பாதம் பணிவோம்.







Wednesday, January 14, 2015

ஓங்குக இறைவனின் அருளாட்சி.

            இறைவன்  இயற்கையில் 

             நமக்கு  நலமது அருளுவதே 

             அதி மன நிறைவு ;அதி மகிழ்ச்சி;

              நம் முன்னோர்கள் இயற்கைக்கு  

              அதி முக்கியத்துவம் அளித்த  தாலே 

             இன்று நாம் கொண்டாடும் பொங்கல் .

              சூரியனை இறைவனாக்கி ,அவனால் 

             நாம் பெரும் மகிழ்வுக்கு  நன்றி காட்டும் 

            இன்றைய  இனிய நாள்;
             
              இயற்கை  அளித்த உணவுவகைகள் ,

            அதை  உழைத்து  வளர்த்த உழவன் 

             அவனுக்கு உதவும் காளைகள் , என

            அனைவருக்கும் மன மகிழ்வு ,

            மன நிறைவு நாள்.
            இந்த புனிதநாளில்  அனைவரும் 

             அனைத்து நலம் பெற்றிட ,

             ஆதித்ய பகாவானை  
                 அகத்தில் வைத்து  போற்றுவோம்.
            பாரில்   பாரதம் பரிதிபோல் ஒளிவீச

            பகலவனை  போற்றுவோம்.

            என்பில் அதனை வெயில்போல் காயுமே 

             அன்பில் அதனை அறம் என்றார் வள்ளுவர்.

         அன்புடன் அனைவரும்  சேர்ந்து 

          அன்பருக்கு அருளும் 
              ஆண்டவனைப்  
                  போற்றுவோம்.

பொங்கல் திருநாளில் பொங்குக மகிழ்ச்சி;
ஓங்குக  இறைவனின்  அருளாட்சி.

      




  

                  
                         

                 

   



Thursday, January 8, 2015

ஆவி பிரியும் போது.

இறைவனின் தத்துவம்  ,

இப்புவி  தத்துவம்

இணைத்துப் பார்த்தால்

இணைவது கடினம்.

ஆதிவாசிகளில் சிலர்

அன்றும் இன்றும் மாக்களாகவே

இப்புவியில் வாழும் அதிசயம்.

மனிதர்களாக வாழ்ந்தும்

\மானிட குணமின்றி

ஈவு  இரக்கமின்றி

தனக்கென வாழும்

பிறரை  அளிக்கும் ஒரு

தீவிரவாதக் கூட்டம்.

தான் வாழும் தாய்நாடே என்று

அனைத்தையும் அர்ப்பணிக்கும் கூட்டம்.

அன்னைக்கு ,தந்தைக்கு ,தங்கைக்கு ,தம்பிக்கு

உற்றார் உறவுக்கு என வாழும் கூட்டம்.

தானம் ,தர்மம் ,ஆன்மிகம் என அமைதிக்கு

ஆண்டவனே என்ற துறவறக் கூட்டம்.

நட்புக்கு இலக்கணம் வகுத்து வாழும் கூட்டம்.

மங்கைக்கும் மதுவுக்கும் அடிமையாகி அழியும் கூட்டம்.

ஆடம்பரமே வாழ்வு என வாழும் கூட்டம்.

தன்மான உணர்வுள்ள கூட்டம்.

நாணல் போல் வளைந்து வாழும் கூட்டம்.

வையகமே ஒரு குடும்பம் எனக் கூறும் கூட்டம்.

ஹிம்சையில் இன்பம் காணும் கூட்டம்.

அஹிம்சையில் அனைத்தும் சகிக்கும் கூட்டம்.

சமுதாய நலப் பணிக் கூட்டம்,

சமுதாயத்திற்கு  சங்கடம் தரும் கூட்டம்.

அனைத்தையும் ஒப்பிட்டால்  அங்கே

ஒரு இயலாமை ,வெற்றிடம்,மகிழ்ச்சி ,துன்பம்

ஆக்கம் ,அழிவு   ஏற்படும்  மந்தணம் .-விளைவு

வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இயலாமையும்

தன்னை மீறிய சக்திசெயல்படும் விதம் புரியா மனிதன்,

தன்னை மீறிய சக்தி யாக  கருதும் இடம் ஆலயம் .

இறைவன் இருக்கும் உணர்வு.

இறைவனையும் சுயநலத்தால் ,ஆணவத்தால் ,

தனக்கென கூட்டம் தான் தான் தலைவன் என்று

பிரித்து  சுகபோகம் காணும் மதங்கள்,

தர்மம் மறந்து தரங்கெட்டு ,மனிதர்களை

மனித நேயத்தைப் பிரித்து கொன்று வாழும் கூட்டம்,

வையாக ஒற்றுமைக்கு இறைவன் -ஆனால்
இந்துக்களுக்கு ஓர் இறைவன் அல்ல என்றும்
இஸ்லாமிற்கு ஒரு இறைவன் என்றும்
கிறிஸ்தவர்களுக்கு ஒரு இறைவன் என்றும்

தமிழனுக்கு ஒரு இறைவன் என்றும்

பல மதம்  பிரித்து மத யானை போல் வாழும் மனிதன்

அமைதி காணும் காலம் எப்போது?

ஆவி பிரியும் போது.









Tuesday, January 6, 2015

ஆண்டவன் அருள் தானே கிட்டும்.

பக்தி என்பது பதட்டத்தில் வருவதல்ல.


பாரினில் பக்தி,படாடோபத்தில் அல்ல.

ஆலயம் செல்வோரெல்லாம் ஆஸ்தி  பெறுவதில்லை.

ஆஸ்தி உடையோர் எல்லாம் ஆலயம் செல்வதில்லை.

 உலகில் இறைவன் படைத்த உயிர்கள் எல்லாம் ,தனக்கு

உரிய கடமை இயற்கையாகச் செய்யும்.-ஆனால்

உயர் பிறவி மனிதனுக்கு அப்படி அல்ல.

சேவல் கூவும் காலநேரம் அறிந்து.

வாலாட்டும் நாய் ,குறைக்கும் நாய்

சூழல் அறிந்து.

அறிவுள்ள மனிதன் ஒரே சமயத்தில்

உள் கோபம் வெளி அன்பு,

வெளி கோபம் உள்ளன்பு

தியாகம் போகம்

இரவு வேலை பகல் தூக்கம்

என்று இயற்கையை  தன்

வசதிக்கு மாற்றும் அறிவு ஜீவி.

இறைவன் அவனுக்கு அளித்த கடமை

இயல்பாக செய்யாமல் ,

ஆசையால் இஷ்டம் போல் செய்து

ஆஸ்தி சேர்க்கும் அதிசயப் பிறவி.

ஆஸ்தி சேர்த்து ஆய்ந்து ஓய்ந்து

அகவை கூடிய பின் ,ஆஸ்திகனாகி
அதுவும் இன்றி அல்லல் பெறும் மனிதன்
இயல்பில் இறைவன் அளித்த ஆற்றல்
இயல்பில் இறைவன் அளித்த கடமை
ஆழ்மனதுடன் சத்தியத்துடனே
தான தர்மத்துடன் ஆற்றினாலே
ஆண்டவன் அருள் தானே கிட்டும்.






அனைத்தையும் பார்த்தால் ஆண்டவனை அதிசயம் புரியும்.

இயற்கையின் படைப்பில் இறைவனின் விந்தை ,

அறிவியல் படைப்பில் அவனளித்த அறிவின் விந்தை,

ஆணவத்தால் அவனை மறக்கும் கணத்தில்

ஆக்ரோஷ இயற்கைச் சீற்றம்,

ஆரோக்ய மருந்து அழகுசாதனங்கள்

அதையும் மீறி  நோய்நொடி அழகு அழகற்றகாட்சிகள்,
பிறப்பின் மகிழ்ச்சி ,இறப்பின் அதிர்ச்சி

அனைத்தும் கண்டே அவன் பாதம் பணியும்

அதிசய ஆன்மிகம்.
இதிலும் எத்தனை விதம்

அறிவே ஆண்டவன் என்றே ஒரு அடியவர் கூட்டம் .
அன்பே  ஆண்டவன்  என்றே ஓர்  அடியவர் கூட்டம்.
உண்மையே ஆண்டவன் என்றே ஓர் அடியவர் கூட்டம்.
செயலாற்று பயனை அவனிடம் விட்டு விடு
பயன் பெற்று பலனை மற்றவர்களுக்கு பயன் படுத்து.
எதையும் கொண்டுவரவில்லை வருத்தப்படாதே.
வறுத்து உடலை ஞானத்தால் ஞாலத்தை மேம்படுத்து.
ஞாலம் வெறும் ஜாலம்;அவனையே சரணடை.
அவன் படைத்த படைப்பு ,அழியும்; அதற்குள் அமரத்துவ கர்மவீரனாகு.
எண்ணங்கள் சிந்தனைகள் ஏற்றங்கள் தாழ்வுகள் அனைத்தும் மாறும்.
அனைத்திற்கும் ஆசைப்படு ;ஆண்டவனை மறக்காதே.

அனைத்தையும் பார்த்தால் ஆண்டவனை அதிசயம் புரியும்.


Monday, January 5, 2015

आरुद्रादर्शन --ஆருத்ரா தர்ஷனம்.











ஆருத்ரா தர்சனம் 

ஆடலரசனின் 

ஆக்ரோஷ நடனம் ,

ஆனந்த நடனம் 

அவனை மறந்தோருக்கு

அஹம்பாவம் கொண்டோருக்கு 

ஆணவம் அழிய படைத்ததே 

காமதகனனின் காமம் .

தாருகாவன ரிஷிகளின் செருக்கு அளித்து 

தருவாசனின் தந்தையை வழிபட 

சிவனின் அழகிய பிக்ஷாடர் வேடம்.

விஷ்ணுவின் அழகிய மோகினி ரூபம்.

காமம் என்பதே கொடிய ஆசை அதை 

அடக்கினால்    நாமும் பிரம்மாஸ்மி .

செருக்கு இன்றி  காமமின்றி வாழ்ந்தால் 

காம தகனனின்  கருணை கிட்டும்.
கலியுக கார்த்திகேயனின்  அருளும் கிட்டும்.

ஆண்-பெண் கவர்ச்சியே அறிவுக்குத் திரை 

அஹம்பாவத்தின்  எல்லையே  இறைவனின் மறதி.
அஹம்பாவம்  காமம் ஒழிந்தால் 
உலகநாதனும் நம் வசமே.
ஆருத்ரா நன்னாளில் நாமும் 
ஆணவம் அழித்து யானை முகமுகண் 
ஆறுமுகன் தந்தையை நாளும் வழங்கினால் 
அவனியில் அல்லல் இன்றி அவன் அருள் பெற்று 
காமத்தை அடக்கி செருக்கு ஒழித்து 
கலியுகத்தில் களிப்புடன் வாழலாம்.



Sunday, January 4, 2015

வேதனையே மிஞ்சும்,

இறைவனின் படைப்பே இயற்கை.

இயற்கையில்  நாம் படைத்தசெயற்கை


இறைவனை தனிமைப் படுத்தி ,

வேறுபடுத்தி ,வேற்றுமைப் படுத்தி,

மனிதநேயம்  மறக்கச்செய்து ,

மதம் என்று மது  அருந்தி ,

மனிதரை  வேறுபடுத்தி ,

சிலர் வாழ  பலரை பலியாக்கும் உணர்வு.

இறைவுணர்வு  உண்மையானால்

இணைந்து வாழும் எண்ணம் தோன்றும்.

இணைந்து வாழ்வில் இன்பம் காண

இறைவனைத் துதுதிப்போம்.

அல்லா என்ற  நாமம்  பிடித்தோர்
அல்லா எங்களுக்கு எல்லாம் என்றே ஏற்க.

இயேசு  என்ற நாமம் பிடித்தால்

ஏசு  என்றே ஜெபியுங்கள்.

ராம் நாமம் பிடித்தால் ராமா என்றே
தியானம் செய்யுங்கள்.

கிருஷ்ணா ,சிவன் ,ஹனுமான் ,
துர்கா,லக்ஷ்மி,சரஸ்வதி

எது பிடிக்குமோ அதையே  ஏற்று

நடந்தால், தேவ அருள் கிட்டும்;

அதை மறந்து போரிட்டால் இறைவன் பெயரில்

வேதனையே மிஞ்சும்,



 reuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu