Monday, December 8, 2014

அகத்தில் அமர்த்தலாம் குடி.

ஆண்டவனைத் தேடிச்செல்வோர் ,

அறிவிலிகள் ;

ஆண்டவனைத் தன்னிடத்தே வரவழைப்போர்

ஞானிகள்.

ஆஷ்ரமங்களில்  கூட்டம் கூட்டுவோர்

ஆனந்தம் உணர்வோர்  --ஆனால்
அங்கும் உண்டு எத்தர்கள் .

ஞானம் தரும் இடங்கள் ஆஷ்ரமங்கள்,

அக்ஞானம் ஒழிக்கும் இடம் ஆஷ்ரமங்கள்.

அன்னதானம் வழங்கும் இடம்  ஆஷ்ரமங்கள் .

அங்கு  சேரும் பணங்கள் ,

சிலருக்கு பாதை மாற்றும்

      பலருக்கு போதை தரும்.

அதில் சேரும் சொத்துக்கள்

உடனடி தானதர்மங்கள் ஆனால்
உள்ளத்தில் இருப்பான் ஆண்டவன்.

உண்மை  தோற்றங்கள் ஜீவசமாதி ஆனபின்
வழித்தோன்றல்கள் வழிமாறி திசைமாறி
வசை மாரி யில் குளித்தே
வஞ்சகம் பல புரிவார்.--எனவே

நெஞ்சகத்தில் அவனை வைத்து
நேர்மையுடன் பூஜித்தால் .இச்
ஜகத்தில் இன்னலின்றி
ஜகந்நாதனை  அகத்தில்
அமர்த்தலாம் குடி.





No comments: