Friday, December 19, 2014

அவனியின் அமைதியும் உண்டு /

சனாதன தர்மம் ,
அதில்  சகலமும் சங்கமம்.

ஞானமும் உண்டு ,
பிரேமையும் உண்டு ,
அருவமும் உண்டு .
உருவமும் உண்டு .
உள்ளத்தில் உறவும் உண்டு ,
எண்ணத்தில் ஏற்றம் உண்டு -

அன்பிற்கும் அஹிம்சைக்கும்

மார்க்கம் உண்டு.

வையகம் வாழ ,

வையகம் ஒரு குடும்பம்  என்ற

அவனியின் ஒற்றுமைக்கும்

வாசகங்கள்  பல உண்டு.

வள்ளலாரின்  வாக்கியம்

அருட்பெருஞ்சோதி ,
அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும் கருணை  என்ற
வாசம் உண்டு.
சிந்துவை ஹிந்து என்று
அயல் நாட்டினர் கொடுத்த சொல்லே
மதமானது என்றால்
அதன் சாகர சங்கமத்தில்
சைவமும் உண்டு .
வைணமும் உண்டு.
அறிஞர் பலர் ,ஞானிகள் பலர் . அதனால்

சைவத்திலும் வைணவத்திலும்

பல பேதங்கள் உண்டு.

கிரமதேவதைகள் உண்டு.

ராமாயணம் ,மகாபாரதமும்

நாடோடிப்பாடலிலும் உண்டு.

நாட்டு நலம் மட்டுமல்ல
சர்வஜனோ சுகிநோபவந்து என்ற
உலக மக்கள் நலமாக வாழும்
பிரார்த்தனைகளும்  உண்டு.
கன்னப்பருக்கும் பெருமை உண்டு .
நந்தனாருக்கும் நற்புகழும் உண்டு.
சனாதன தர்மத்தில் சாகர சங்கமும்
அவனியின் அமைதியும் உண்டு /.









,

No comments: