Thursday, December 18, 2014

யானைமுகன் அருளவேண்டும்.




முருகா , முருகா ,முருகா -என்றே 

நெஞ்சுருக  நேசமிக்க நாம ஜபம் 

நாளும்  ஆழ்மனம் வைத்து செப்பினால்- நாம் 

விரும்பும் பலன்கள் பெற வித்தாகும்.

வித்தாகி விருக்ஷமுமாகி  பூவாகி 

காயாகி ,கனியாகி ,சுவையாகி 

தித்திக்கும்  வாழ்க்கையது.

ஜன்மப் பகை நீங்கும் ,
ஜனன தோஷம் நீங்கும் 
ஜகத்தினில் பாவம் போகும் ,
ஜாமம் எட்டிலும் பயம் போகும்.

ஜாக்கிரதை என்றசொல்லுக்கு இடமில்லை,
சரவணன் சடுதில் வந்து காப்பான்.

சத்தியம் வேண்டும் ,
ஒருமை மனம் வேண்டும் ,
மனதினில் நேர்மை வேண்டும் ,
மனம் முழுதும் முருகனின் 
மூலம் வேண்டும்;
வேல் வேண்டும் ;அவன்
 கொடி சேவல் வேண்டும்.
மயில் வாஹனம் வேண்டும் .
அகம் முழுதும் ஆறுமுகன் 
எண்ணம் வேண்டும்.
சித்தம் முழுதும்  சிங்கார வேலன் 

சிந்தனை வேண்டும்.
அலைபாயும் ஆசைகளை 
அடக்கவே வேண்டும் .
ஆறுமுகம் கருணை பெற 
யானைமுகன் அருளவேண்டும்.




No comments: