Wednesday, December 3, 2014

ஞாலத்தில் ஆண்டவன் அருள் கிட்டும்.

அன்பே  ஆண்டவன்  என்றார்  ,
 அறிவும் ஞானமும் ஆண்டவன் என்றார் ,
 ஞானம் பெற்றோர்
உலகியலுக்கு உள்ளத்தில் இடம் அளித்தால்
உள்ளத்தில் ஊறு என்றார்.
எண்ணத்தில் ஏற்றமும் ,
உதவும் போக்கும் ,
ஞானத்திலே கண்டார்.,
ஞாலத்தில் இன்பமே இல்லை என்றார்.
நான்குவகை உணர்வுகளற்ற நிலை
அன்பே  என்றால் ஆண்டாள் ,
அனுதினமும் மூவெட்டு மணியும்
அவனையே நினைப்பதை
அவனியில் கூறியோர் ,
உலகியலில் சுழன்று  வந்தோர்.
அருணகிரி  ,பர்த்ரு ஹரி ,பட்டினத்தார்
பட்டறிவு  நமக்கும் பட்ட பின்பே,
கண்ணதாசன் பட்டறிவு அர்த்தமுள்ள  ஹிந்துமதம்.

இது ஆரம்பத்தில் இளமையில்  சொன்னால்

ஒத்தவயதில் ஒப்பாது.

முதுமையில்  சொன்னால் ,
பெருசுசொல்லுது என்பர்.
அதற்கென்று ஞானம் பெற்றோர்  சொல்லால்
அவனி பெரும் சாந்தி.
அவனிடம் பெருகும் பற்று.
பகலவன் கண்ட பணிபோன்று
துன்பங்கள்  அகன்று
இன்பங்கள்  தெய்வீக பற்று பெருகும்.

ஞானமும் அன்பும் வந்தால்
ஞாலத்தில் ஆண்டவன் அருள் கிட்டும்.

s



No comments: