Monday, November 3, 2014

அவனடிபோற்றுவோம்

ஆறுமுகம் யானைமுகன் தம்பி

முக்கண்ணனின்  மகன் ,

ஆற்றலின் அழகின் அருளின்  மேலோன்.

அறுபடைவீட்டில்  அமர்ந்து அருள்பாளிப்பவன்.


வடக்கில் இருந்து  தென் பழனி வந்தவன்.

தமிழ் கடவுள் என்றே ஆனவன்.

குன்றுதோறாடும் குணக்குன்று.

அபிஷேகப்பிரியன். அலங்காரப் பிரியன்.

அருணகிரியைத் தடுத்தாட்கொண்டு,

அழகு திருப்புகழ்  ஆக்குவித்தவன்.

அன்பே வடிவானவன் அருளே  பொருளானவன்

அவனடிபோற்றுவோம். அவனருள் பெறுவோம்.


No comments: