Tuesday, November 18, 2014

இறவன் அருள் கிட்டும்.

                                                               இறைவன்   அருள் கிடைக்க                                                                   
                         பலர் கூறும் வழி தியானம்r.

இந்த கண்மூடித்தன தியானத்திற்கா ஆண்டவன்  படைத்தான் .


சற்றே சிந்தித்துப்பாருங்கள்.


நம் பாரத நாடு  ஞானபூமி. 

பக்தி நிறைந்த ஆன்மீக பூமி.

இதற்கும் மேலாக கர்மபூமி.

நமக்கு இறைவன் அழித்த  திறன் 

சும்மா இருக்க அல்ல.

அருணகிரியை சும்மா இரு என்று சொன்னது 

செயலற்று இருக்க அல்ல.

தீய இன்பம் பெறுவதில் இருந்து சும்மா இரு.

இறைவன் அருளால் அவர்க்குத் தந்த ஆற்றல் 

திருப்புகழ்  அமிர்தம்.

இவ்வாறு செயலாற்ற சிலருக்குத்திறன்.

அதைத்தான் நாம் செய்யவேண்டும் .

அதுதான் ஆண்டவன் அருள் கிட்டைக்க பெரும் வழி .

அதை விடுத்து  ராமா,கிருஷ்ணா .முருகா என்று 

மணிக்கணக்கில் அமர்வது  என்ற ஆன்மிகம் 

ஆண்டவன் விரும்புவதில்லை .

உழவன் உழுது பயிரிடவேண்டும்.

ஆசிரியர் பாடம் ஈடுபாடுடன் நடத்தவேண்டும்.

காவலர் கடமையை செய்யவேண்டும்.

இதைத் தான்   பகவத் கீதையில் 

கடமையைச் செய்,வரும் பலனில் நிம்மதியாய் இரு.

ஆண்டவன் அருள்  கிட்டும்.





 

No comments: